FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, June 8, 2016

மாற்றுத் திறனாளிகள் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும்: தில்லி மாநாட்டில் தமிழக அரசு வலியுறுத்தல்

03.06.2016, புதுடில்லி, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகள் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தில்லி மாநாட்டில் தமிழக அரசு வலியுறுத்தியது.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை பொறுப்பு வகிக்கும் மாநில சமூக நலத் துறை அமைச்சர்கள் மாநாடு தில்லி விஞ்ஞான் பவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலம், சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் மருத்துவர் வி.சரோஜா பங்கேற்றுப் பேசியதாவது:

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், மாநில அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறன் குழந்தைகளை தமிழக முதல்வர் தாயுள்ளத்துடன் பாதுகாத்து வருகிறார். அவர்களுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியும் வருகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. 2010-11 நிதி நிலை ஆண்டறிக்கையில் ரூ.111.86 கோடி ஒதுக்கப்பட்டது. 2015-16 நிதியாண்டில் இந்த நிதி ஒதுக்கீடு 361.96 கோடியாக அதிகரிக்கப்பட்டது. 

மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் நடமாடும் சிகிச்சைப் பிரிவுகளும்,
காது கேளாத, மன நலன் பாதித்தவர்களுக்கு சிறப்புத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மன நலம் பாதித்த, கால்கள் செயலிழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.237.50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 1,33,891 பேர் பயனடைந்து வருகின்றனர்.

மாநில அரசின் போக்குவரத்துப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு பயணச் சலுகை அளிக்கப்படுகிறது. அனைத்துப் பிரிவு மாற்றுத் திறனாளிகளும் மாநிலத்தில் எந்த இடத்திற்கும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு 70 சதவீதம் பயணச் சலுகை அளிக்கப்படுகிறது. "தாலிக்கு தங்கம்' திட்டமும் மாற்றுத் திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படுகிறது.

மேலும், கால்கள் பாதித்த மாற்றுத் திறனாளி மாணவர்கள், தனி நபர்களுக்கு பெட்ரோலில் இயங்கும் ரூ.14.75 கோடியில் மொத்தம் 2,691 ஸ்கூட்டர்களை தமிழக அரசு வழங்கியுள்ளது. 

மாநிலத்தில் 435 சிறப்புப் பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கும் வகையில் 42 தொழில் பயிற்சி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள, வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.600 முதல் ரூ.1,000 வரை ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
அரசுப் பணிகளில் 3 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 11.79 லட்சம் பேரில் 95 சதவீதம் பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

"அணுகத்தக்க இந்தியா பிரசாரம்' திட்டத்தின் கீழ் சென்னை, கோவையில் 49 கட்டடங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. அந்தக் கட்டடங்கள் மாற்றுத் திறனாளிகள் தங்கு தடையின்றி செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கான திட்டங்களுக்குரிய நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும். அதேபோன்று, மாற்றுத் திறனாளிகள் சட்ட அமலாக்க திட்டத்திற்கும் (எஸ்ஐபிடிஏ) மத்திய அரசு நிதி ஆதரவையும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் திட்ட முன்மொழிவுக்கு ஒப்புதலையும் அளிக்க வேண்டும் என்றார் அமைச்சர் சரோஜா. 

இந்த மாநாட்டில் தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை முதன்மைச் செயலர் எம்.டி. நசிமுதீன் பங்கேற்றார்.

No comments:

Post a Comment