FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, June 14, 2016

வாய் பேசாத, காது கேளாத ஜோடிகளுக்கு நவீன சுயம்வரம் நடத்தி இலவச திருமணம்

ஓம் டிவைன் கான்சியஸ்னெஸ் அமைப்பு சார்பில் சென்னை வேப்பேரியில் நேற்று நடைபெற்ற காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான நவீன சுயம்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.
13.06.2016, காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களை நாங்கள் கடவுளின் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறோம். அதனால்தான் கடந்த 4 ஆண்டுகளாக இவர்களுக்கு நவீன சுயம்வரம் நடத்தி மணமேடை அமைத்துக் கொடுத்து வருகிறோம் என மனிதநேயத்துடன் கூறுகிறார் சென்னை தி.நகர் ஓம் டிவைன் கான்சியஸ்னெஸ் அமைப்பின் நிறுவனர் ஆர்.மோகன கிருஷ்ணசுவாமி.

இந்த அமைப்பின் சார்பில் சென்னை வேப்பேரியில் நேற்று நடந்த நவீன சுயம்வரம் நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான திருமண வயதைத் தொட்ட, திருமண வயதைத் தாண்டிய ஆண்களும், பெண்களும் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் காது கேளாத, வாய் பேச முடியாத, சரியாக நடக்க முடியாத பகுதி ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள்.

இவர்களைப் பற்றியும், இவர்களது குடும்பம் மற்றும் வருமானம், எதிர்பார்ப்பு உள்ளிட்டவற்றை அவர்களது பாணியிலேயே விளக்கி மணமகன் மற்றும் மணமகளை அறிமுகம் செய்து வைத்தனர் சைகை நிபுணர்கள் விஜயலட்சுமியும், வினோத்தும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மற்றும் தனித்திறன் போட்டிகளில் முத்திரை பதித்து பிரதமர் கையால் தேசிய அளவில் பரிசு மற்றும் பாராட்டுக் கேடயம் பெற்ற சென்னை போரூரைச் சேர்ந்த இளம்பெண் நிவேதிதாவின் பெற்றோர் இளையபாரதி- வனிதா கூறும்போது, ‘‘எங்கள் மகளுக்கு உள்ள இந்த குறைபாடுகளை நாங்கள் ஒரு குறையாக நினைத்தது இல்லை. பிரதமர் கையால் விருது வாங்கி அவர்தான் எங்களுக்கு பெருமை சேர்த்திருக்கார். எங்களைப் போன்ற பெற்றோரின் மனக்குறையை ஓம் டிவைன் அமைப்பு தீர்த்து வைத்துள்ளது’’ என்றனர்.

சரளமாக பேச மட்டும் முடியாது என்ற குறைபாடு உடைய டிசிஎஸ் நிறுவனத்தில் கைநிறைய சம்பாதிக்கும் இளம்பெண் ரோஸி, எந்தக் குறையும் கிடையாது, ஆனால் மணந்தால் வாய் பேசாத, காது கேளாத ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணைத்தான் மணப்பேன் என வைராக்கியமாக இருந்து வரும் வேலூர் இளைஞர் கார்த்திக் போன்றவர்கள் இந்த சுயம்வரத்தின் சிறப்பு விருந்தினர்கள்.

இந்த நவீன சுயம்வரம் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய சென்னை தி.நகர் ஓம் டிவைன் கான்சியஸ்னெஸ் அமைப்பின் நிர்வாகி ஆர்.மோகன கிருஷ்ணசுவாமி, ‘‘வாய் பேசாத, காது கேளாத இவர்களை இந்த சமூகம் புறக்கணித்துவிடக் கூடாது என்பதற்காக எங்கள் அமைப்பு போராடி வருகிறது. கும்பகோணத் தில் ஒரு குடும்பத்தில் கண்ட ஒரு நிகழ்வுதான் என்னை மனதளவில் பாதித்தது. அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக இவர்களுக்கும் சொந்த செலவில் சுயம்வரம் நடத்தி இலவச திருமணமும் செய்து வைத்து வருகிறோம்.

இங்கு ஜாதி, சமயம், அந்தஸ்து ஆகியவை தடைக் கற்கள் கிடையாது. இதுவரை நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி ஜோடிகள் எங்கள் அமைப்பின் மூலம் தம்பதிகளாகி உள்ளனர். இன்னும் உதவி கிடைக்காத பலருக்கு நல்ல மேடையாக இருக்க விரும்புகிறோம். தவிர வாரம்தோறும் அன்னதானமும் அளித்து வருகிறோம்” என்றார்.

No comments:

Post a Comment