FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, June 17, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை: ஐ.நா.வில் இந்தியா தகவல்

16.06.2016
இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்தன்மை வாய்ந்த பிரத்யேக அடையாள அட்டையை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஐ.நா. சபையில் மத்திய அமைச்சக செயலர் வினோத் அகர்வால் தெரிவித்தார்.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் செயலரான வினோத் அகர்வால் பங்கேற்றுப் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், இந்தியா முழுவதும் அவரை அடையாளம் காணும் நோக்கில், தனித்தன்மை வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளின் கல்வித் தகுதி, வருமானம், பணி நிலை, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தகவல்களும் அடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தகவல்தளத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான மத்தியப் பல்கலைக்கழகத்தை கேரளத்தில் அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலக மக்கள் தொகையில் கோடிக்கணக்கானோர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். அவர்களில் 80 சதவீதம் பேர் வளர்ந்து வரும் நாடுகளில் வசிக்கின்றனர். இந்தியாவில் சுமார் 2.7 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் நல மசோதா, நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த மசோதா, மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று வினோத் அகர்வால் பேசினார்.

No comments:

Post a Comment