FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, June 17, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை: ஐ.நா.வில் இந்தியா தகவல்

16.06.2016
இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்தன்மை வாய்ந்த பிரத்யேக அடையாள அட்டையை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஐ.நா. சபையில் மத்திய அமைச்சக செயலர் வினோத் அகர்வால் தெரிவித்தார்.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் செயலரான வினோத் அகர்வால் பங்கேற்றுப் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், இந்தியா முழுவதும் அவரை அடையாளம் காணும் நோக்கில், தனித்தன்மை வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளின் கல்வித் தகுதி, வருமானம், பணி நிலை, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தகவல்களும் அடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தகவல்தளத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான மத்தியப் பல்கலைக்கழகத்தை கேரளத்தில் அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலக மக்கள் தொகையில் கோடிக்கணக்கானோர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். அவர்களில் 80 சதவீதம் பேர் வளர்ந்து வரும் நாடுகளில் வசிக்கின்றனர். இந்தியாவில் சுமார் 2.7 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் நல மசோதா, நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த மசோதா, மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று வினோத் அகர்வால் பேசினார்.

No comments:

Post a Comment