FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, June 17, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை: ஐ.நா.வில் இந்தியா தகவல்

16.06.2016
இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்தன்மை வாய்ந்த பிரத்யேக அடையாள அட்டையை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஐ.நா. சபையில் மத்திய அமைச்சக செயலர் வினோத் அகர்வால் தெரிவித்தார்.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் செயலரான வினோத் அகர்வால் பங்கேற்றுப் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், இந்தியா முழுவதும் அவரை அடையாளம் காணும் நோக்கில், தனித்தன்மை வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளின் கல்வித் தகுதி, வருமானம், பணி நிலை, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தகவல்களும் அடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தகவல்தளத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான மத்தியப் பல்கலைக்கழகத்தை கேரளத்தில் அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலக மக்கள் தொகையில் கோடிக்கணக்கானோர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். அவர்களில் 80 சதவீதம் பேர் வளர்ந்து வரும் நாடுகளில் வசிக்கின்றனர். இந்தியாவில் சுமார் 2.7 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் நல மசோதா, நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த மசோதா, மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று வினோத் அகர்வால் பேசினார்.

No comments:

Post a Comment