FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, June 26, 2016

பெற்றோரைத் தேட ரயில் பயணம்: வாய் பேச முடியாத கீதா விருப்பம்

 26.06.2016, பாகிஸ்தானில் இருந்து தாயகமான இந்தியா திரும்பிய வாய் பேசமுடியாத, காது கேளாத இளம்பெண் கீதா, பெற்றோரிடம் இருந்து பிரிந்த ரயில் நிலையத்தைக் கண்டறிந்து தனது பெற்றோரைத் தேடவுள்ளார்.
அவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர், பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த சம்ஜெüதா விரைவு ரயிலில் தன்னந்தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு 7 அல்லது 8 வயது இருக்கும் என்று கருதப்படுகிறது. பெற்றோரிடம் இருந்து பிரிந்த கீதாவை அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீட்டு, "எதி' அறக்கட்டளையில் ஒப்படைத்தனர்.
அண்மையில் "பஜ்ரங்கி பாய்ஜான்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் பாகிஸ்தான் சிறுமி ஒருவரை, அவரது தாயுடன் சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வரும் காட்சியைப் போல் கீதாவும், இந்தியாவில் உள்ள தன் பெற்றோருடன் இணைய விரும்பினார். அதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் அரசு அதிகாரிகளும் மேற்கொண்டனர்.
பின்னர் அலுவலக ரீதியிலான நடைமுறைகள் முடிவடைந்தவுடன் கீதா கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி தாயகம் திரும்பினார்.
இதையடுத்து மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள காது கேளாத- வாய் பேச முடியாதவர்களுக்கான காப்பகத்தில் கீதா தங்க வைக்கப்பட்டார். இந்நிலையில் தன் பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்காக தான் ரயில் பயணம் மேற்கொள்ளவுள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா திரும்பும்போது கல்வியறிவு இல்லாத பெண்ணாக இருந்த கீதா, தற்போது ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றைக் கற்று வருகிறார்.

No comments:

Post a Comment