FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, June 26, 2016

பெற்றோரைத் தேட ரயில் பயணம்: வாய் பேச முடியாத கீதா விருப்பம்

 26.06.2016, பாகிஸ்தானில் இருந்து தாயகமான இந்தியா திரும்பிய வாய் பேசமுடியாத, காது கேளாத இளம்பெண் கீதா, பெற்றோரிடம் இருந்து பிரிந்த ரயில் நிலையத்தைக் கண்டறிந்து தனது பெற்றோரைத் தேடவுள்ளார்.
அவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர், பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த சம்ஜெüதா விரைவு ரயிலில் தன்னந்தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு 7 அல்லது 8 வயது இருக்கும் என்று கருதப்படுகிறது. பெற்றோரிடம் இருந்து பிரிந்த கீதாவை அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீட்டு, "எதி' அறக்கட்டளையில் ஒப்படைத்தனர்.
அண்மையில் "பஜ்ரங்கி பாய்ஜான்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் பாகிஸ்தான் சிறுமி ஒருவரை, அவரது தாயுடன் சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வரும் காட்சியைப் போல் கீதாவும், இந்தியாவில் உள்ள தன் பெற்றோருடன் இணைய விரும்பினார். அதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் அரசு அதிகாரிகளும் மேற்கொண்டனர்.
பின்னர் அலுவலக ரீதியிலான நடைமுறைகள் முடிவடைந்தவுடன் கீதா கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி தாயகம் திரும்பினார்.
இதையடுத்து மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள காது கேளாத- வாய் பேச முடியாதவர்களுக்கான காப்பகத்தில் கீதா தங்க வைக்கப்பட்டார். இந்நிலையில் தன் பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்காக தான் ரயில் பயணம் மேற்கொள்ளவுள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா திரும்பும்போது கல்வியறிவு இல்லாத பெண்ணாக இருந்த கீதா, தற்போது ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றைக் கற்று வருகிறார்.

No comments:

Post a Comment