FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, June 26, 2016

பெற்றோரைத் தேட ரயில் பயணம்: வாய் பேச முடியாத கீதா விருப்பம்

 26.06.2016, பாகிஸ்தானில் இருந்து தாயகமான இந்தியா திரும்பிய வாய் பேசமுடியாத, காது கேளாத இளம்பெண் கீதா, பெற்றோரிடம் இருந்து பிரிந்த ரயில் நிலையத்தைக் கண்டறிந்து தனது பெற்றோரைத் தேடவுள்ளார்.
அவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர், பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த சம்ஜெüதா விரைவு ரயிலில் தன்னந்தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு 7 அல்லது 8 வயது இருக்கும் என்று கருதப்படுகிறது. பெற்றோரிடம் இருந்து பிரிந்த கீதாவை அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீட்டு, "எதி' அறக்கட்டளையில் ஒப்படைத்தனர்.
அண்மையில் "பஜ்ரங்கி பாய்ஜான்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் பாகிஸ்தான் சிறுமி ஒருவரை, அவரது தாயுடன் சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வரும் காட்சியைப் போல் கீதாவும், இந்தியாவில் உள்ள தன் பெற்றோருடன் இணைய விரும்பினார். அதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் அரசு அதிகாரிகளும் மேற்கொண்டனர்.
பின்னர் அலுவலக ரீதியிலான நடைமுறைகள் முடிவடைந்தவுடன் கீதா கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி தாயகம் திரும்பினார்.
இதையடுத்து மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள காது கேளாத- வாய் பேச முடியாதவர்களுக்கான காப்பகத்தில் கீதா தங்க வைக்கப்பட்டார். இந்நிலையில் தன் பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்காக தான் ரயில் பயணம் மேற்கொள்ளவுள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா திரும்பும்போது கல்வியறிவு இல்லாத பெண்ணாக இருந்த கீதா, தற்போது ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றைக் கற்று வருகிறார்.

No comments:

Post a Comment