FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, June 8, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

06.06.2016, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் நந்தகுமாரிடம் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கத்தின் மாநில துணைசெயலாளர் சையது முஸ்தபா ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை வங்கிகளின் ஏஜெண்டுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மாதத்தில் ஒரு நாளில் மட்டும் வழங்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாளில் வாங்க தவறினால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வங்கி அலுவலர்கள் குறிப்பிடும் நாளில் சென்று உதவித்தொகை பெற வேண்டும். இதனால் மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் உதவித்தொகை விடுபடும் மாதங்களில் அவர்களால் விவரங்கள் அறிந்து கொள்ள மிகவும் சிரமமாக உள்ளது. இதுசம்பந்தமாக ஏஜெண்டுகளுக்கும் விவரம் தெரிவது இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே மாற்றுத்திறனாளிகள் பெயரில் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் நேரடியாக உதவித்தொகை செலுத்த ஆவண செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். உதவித்தொகை புதிதாக பெறுபவர்கள் வட்டாட்சியரிடம் மனு செய்து பதில் பெற 5,6 மாதங்கள் ஆகிறது. மீண்டும் வட்டாட்சியரை அணுகும் போது புதிதாக மனு அளிக்கும் படி கேட்கிறார்கள். எனவே ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி உதவித்தொகை முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment