FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, June 8, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

06.06.2016, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் நந்தகுமாரிடம் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கத்தின் மாநில துணைசெயலாளர் சையது முஸ்தபா ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை வங்கிகளின் ஏஜெண்டுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மாதத்தில் ஒரு நாளில் மட்டும் வழங்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாளில் வாங்க தவறினால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வங்கி அலுவலர்கள் குறிப்பிடும் நாளில் சென்று உதவித்தொகை பெற வேண்டும். இதனால் மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் உதவித்தொகை விடுபடும் மாதங்களில் அவர்களால் விவரங்கள் அறிந்து கொள்ள மிகவும் சிரமமாக உள்ளது. இதுசம்பந்தமாக ஏஜெண்டுகளுக்கும் விவரம் தெரிவது இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே மாற்றுத்திறனாளிகள் பெயரில் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் நேரடியாக உதவித்தொகை செலுத்த ஆவண செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். உதவித்தொகை புதிதாக பெறுபவர்கள் வட்டாட்சியரிடம் மனு செய்து பதில் பெற 5,6 மாதங்கள் ஆகிறது. மீண்டும் வட்டாட்சியரை அணுகும் போது புதிதாக மனு அளிக்கும் படி கேட்கிறார்கள். எனவே ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி உதவித்தொகை முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment