FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, June 8, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

06.06.2016, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் நந்தகுமாரிடம் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கத்தின் மாநில துணைசெயலாளர் சையது முஸ்தபா ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை வங்கிகளின் ஏஜெண்டுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மாதத்தில் ஒரு நாளில் மட்டும் வழங்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாளில் வாங்க தவறினால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வங்கி அலுவலர்கள் குறிப்பிடும் நாளில் சென்று உதவித்தொகை பெற வேண்டும். இதனால் மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் உதவித்தொகை விடுபடும் மாதங்களில் அவர்களால் விவரங்கள் அறிந்து கொள்ள மிகவும் சிரமமாக உள்ளது. இதுசம்பந்தமாக ஏஜெண்டுகளுக்கும் விவரம் தெரிவது இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே மாற்றுத்திறனாளிகள் பெயரில் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் நேரடியாக உதவித்தொகை செலுத்த ஆவண செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். உதவித்தொகை புதிதாக பெறுபவர்கள் வட்டாட்சியரிடம் மனு செய்து பதில் பெற 5,6 மாதங்கள் ஆகிறது. மீண்டும் வட்டாட்சியரை அணுகும் போது புதிதாக மனு அளிக்கும் படி கேட்கிறார்கள். எனவே ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி உதவித்தொகை முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment