FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, June 8, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

06.06.2016, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் நந்தகுமாரிடம் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கத்தின் மாநில துணைசெயலாளர் சையது முஸ்தபா ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை வங்கிகளின் ஏஜெண்டுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மாதத்தில் ஒரு நாளில் மட்டும் வழங்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாளில் வாங்க தவறினால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வங்கி அலுவலர்கள் குறிப்பிடும் நாளில் சென்று உதவித்தொகை பெற வேண்டும். இதனால் மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் உதவித்தொகை விடுபடும் மாதங்களில் அவர்களால் விவரங்கள் அறிந்து கொள்ள மிகவும் சிரமமாக உள்ளது. இதுசம்பந்தமாக ஏஜெண்டுகளுக்கும் விவரம் தெரிவது இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே மாற்றுத்திறனாளிகள் பெயரில் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் நேரடியாக உதவித்தொகை செலுத்த ஆவண செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். உதவித்தொகை புதிதாக பெறுபவர்கள் வட்டாட்சியரிடம் மனு செய்து பதில் பெற 5,6 மாதங்கள் ஆகிறது. மீண்டும் வட்டாட்சியரை அணுகும் போது புதிதாக மனு அளிக்கும் படி கேட்கிறார்கள். எனவே ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி உதவித்தொகை முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment