FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, June 17, 2016

மாற்று திறனாளிகள் வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு பயன் தருமா?

17.06.2016, சென்னை:மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு, சுங்க கட்டணத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விலக்கு அளித்துள்ளது.
மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில், மாற்றுத் திறனாளிகளின், மூன்று சக்கர வாகனங்களுக்கு, கட்டணச் சலுகை உள்ளது. ஆனால், கார் போன்ற மாற்றுத் திறனாளி வாகனங்களுக்கும், தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. 'மாற்றுத் திறனாளிகளின் அனைத்து வாகனங்களுக்கும், சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, பல அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், ஜூன், 13 முதல், மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, மாறுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு, சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இது பெரிதாக பயன் அளிக்காது என, மாற்றுத் திறனாளி அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டமைப்பின் பொதுச் செயலர் நம்புராஜன் கூறியதாவது: ஏற்கனவே, மாற்றுத் திறனாளிகளின் இரு சக்கர, மூன்று சக்கர வானங்களுக்கு கட்டணச் சலுகை உள்ளது. தற்போது, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு சலுகை என்றால், மாற்றி வடிவமைக்கப்பட்ட கார்கள் என, கருதலாம். இவ்வாறு, கார் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள், தமிழகத்தில், 100 பேர் கூட இருக்க வாய்ப்பில்லை.

கார் இல்லாத, கார் ஓட்டத் தெரியாத மாற்றுத் திறனாளிகள் வாடகை கார், மற்றவர்களின் கார்களை பயன்படுத்துவர். மாற்றுத் திறனாளிகள் செல்லும் அனைத்து கார்களுக்கும் சலுகை என, அறிவித்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment