FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, June 17, 2016

மாற்று திறனாளிகள் வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு பயன் தருமா?

17.06.2016, சென்னை:மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு, சுங்க கட்டணத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விலக்கு அளித்துள்ளது.
மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில், மாற்றுத் திறனாளிகளின், மூன்று சக்கர வாகனங்களுக்கு, கட்டணச் சலுகை உள்ளது. ஆனால், கார் போன்ற மாற்றுத் திறனாளி வாகனங்களுக்கும், தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. 'மாற்றுத் திறனாளிகளின் அனைத்து வாகனங்களுக்கும், சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, பல அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், ஜூன், 13 முதல், மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, மாறுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு, சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இது பெரிதாக பயன் அளிக்காது என, மாற்றுத் திறனாளி அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டமைப்பின் பொதுச் செயலர் நம்புராஜன் கூறியதாவது: ஏற்கனவே, மாற்றுத் திறனாளிகளின் இரு சக்கர, மூன்று சக்கர வானங்களுக்கு கட்டணச் சலுகை உள்ளது. தற்போது, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு சலுகை என்றால், மாற்றி வடிவமைக்கப்பட்ட கார்கள் என, கருதலாம். இவ்வாறு, கார் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள், தமிழகத்தில், 100 பேர் கூட இருக்க வாய்ப்பில்லை.

கார் இல்லாத, கார் ஓட்டத் தெரியாத மாற்றுத் திறனாளிகள் வாடகை கார், மற்றவர்களின் கார்களை பயன்படுத்துவர். மாற்றுத் திறனாளிகள் செல்லும் அனைத்து கார்களுக்கும் சலுகை என, அறிவித்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment