FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, June 17, 2016

மாற்று திறனாளிகள் வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு பயன் தருமா?

17.06.2016, சென்னை:மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு, சுங்க கட்டணத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விலக்கு அளித்துள்ளது.
மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில், மாற்றுத் திறனாளிகளின், மூன்று சக்கர வாகனங்களுக்கு, கட்டணச் சலுகை உள்ளது. ஆனால், கார் போன்ற மாற்றுத் திறனாளி வாகனங்களுக்கும், தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. 'மாற்றுத் திறனாளிகளின் அனைத்து வாகனங்களுக்கும், சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, பல அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், ஜூன், 13 முதல், மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, மாறுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு, சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இது பெரிதாக பயன் அளிக்காது என, மாற்றுத் திறனாளி அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டமைப்பின் பொதுச் செயலர் நம்புராஜன் கூறியதாவது: ஏற்கனவே, மாற்றுத் திறனாளிகளின் இரு சக்கர, மூன்று சக்கர வானங்களுக்கு கட்டணச் சலுகை உள்ளது. தற்போது, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு சலுகை என்றால், மாற்றி வடிவமைக்கப்பட்ட கார்கள் என, கருதலாம். இவ்வாறு, கார் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள், தமிழகத்தில், 100 பேர் கூட இருக்க வாய்ப்பில்லை.

கார் இல்லாத, கார் ஓட்டத் தெரியாத மாற்றுத் திறனாளிகள் வாடகை கார், மற்றவர்களின் கார்களை பயன்படுத்துவர். மாற்றுத் திறனாளிகள் செல்லும் அனைத்து கார்களுக்கும் சலுகை என, அறிவித்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment