FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, June 20, 2016

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் சண்டிகர் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார்

19.06.2016, புதுடெல்லி: சண்டிகரில் நாளை நடைபெறும் மெகா யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் இந்த நாளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தையொட்டி நாளை சண்டிகரில் நடைபெறும் மெகா யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 

இந்ந நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் 150 பேர் பங்கேற்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளை குறிக்கும் வகையில் திவ்யங்ஸ் என்ற வார்த்தையை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். நாளை நடைபெறும் இந்த யோகா தின நிகழ்ச்சியில் காது கேளாத, வாய் பேசாத, பார்வை இழந்த மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கின்றனர். மேலும் கைகால்களை இழந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 18 பேரும் சக்கர நாற்காலியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இது தவிர இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 ஆயிரம் பேரும் சண்டிகரில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஒரு மாதமாக சண்டிகரில் உள்ள அறிவுசார் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிறுவனம் (கிரிட்) சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் யோகா குரு ராம்தேவ் பங்கேற்கும் யோகா தின நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. அங்குள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் சுமார் 3 ஆயிரம் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதே நாளில் நாடு முழுவதும் மத்திய ரிசர்வ் போலீஸ், சிஐஎஸ்எப், எஸ்எஸ்பி உள்ளிட்ட பல்வேறு படை பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் வீரர்கள் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

1 comment: