FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, June 20, 2016

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் சண்டிகர் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார்

19.06.2016, புதுடெல்லி: சண்டிகரில் நாளை நடைபெறும் மெகா யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் இந்த நாளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தையொட்டி நாளை சண்டிகரில் நடைபெறும் மெகா யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 

இந்ந நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் 150 பேர் பங்கேற்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளை குறிக்கும் வகையில் திவ்யங்ஸ் என்ற வார்த்தையை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். நாளை நடைபெறும் இந்த யோகா தின நிகழ்ச்சியில் காது கேளாத, வாய் பேசாத, பார்வை இழந்த மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கின்றனர். மேலும் கைகால்களை இழந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 18 பேரும் சக்கர நாற்காலியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இது தவிர இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 ஆயிரம் பேரும் சண்டிகரில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஒரு மாதமாக சண்டிகரில் உள்ள அறிவுசார் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிறுவனம் (கிரிட்) சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் யோகா குரு ராம்தேவ் பங்கேற்கும் யோகா தின நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. அங்குள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் சுமார் 3 ஆயிரம் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதே நாளில் நாடு முழுவதும் மத்திய ரிசர்வ் போலீஸ், சிஐஎஸ்எப், எஸ்எஸ்பி உள்ளிட்ட பல்வேறு படை பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் வீரர்கள் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

1 comment: