FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, June 20, 2016

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் சண்டிகர் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார்

19.06.2016, புதுடெல்லி: சண்டிகரில் நாளை நடைபெறும் மெகா யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் இந்த நாளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தையொட்டி நாளை சண்டிகரில் நடைபெறும் மெகா யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 

இந்ந நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் 150 பேர் பங்கேற்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளை குறிக்கும் வகையில் திவ்யங்ஸ் என்ற வார்த்தையை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். நாளை நடைபெறும் இந்த யோகா தின நிகழ்ச்சியில் காது கேளாத, வாய் பேசாத, பார்வை இழந்த மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கின்றனர். மேலும் கைகால்களை இழந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 18 பேரும் சக்கர நாற்காலியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இது தவிர இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 ஆயிரம் பேரும் சண்டிகரில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஒரு மாதமாக சண்டிகரில் உள்ள அறிவுசார் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிறுவனம் (கிரிட்) சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் யோகா குரு ராம்தேவ் பங்கேற்கும் யோகா தின நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. அங்குள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் சுமார் 3 ஆயிரம் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதே நாளில் நாடு முழுவதும் மத்திய ரிசர்வ் போலீஸ், சிஐஎஸ்எப், எஸ்எஸ்பி உள்ளிட்ட பல்வேறு படை பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் வீரர்கள் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

1 comment: