FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, June 20, 2016

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் சண்டிகர் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார்

19.06.2016, புதுடெல்லி: சண்டிகரில் நாளை நடைபெறும் மெகா யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் இந்த நாளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தையொட்டி நாளை சண்டிகரில் நடைபெறும் மெகா யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 

இந்ந நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் 150 பேர் பங்கேற்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளை குறிக்கும் வகையில் திவ்யங்ஸ் என்ற வார்த்தையை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். நாளை நடைபெறும் இந்த யோகா தின நிகழ்ச்சியில் காது கேளாத, வாய் பேசாத, பார்வை இழந்த மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கின்றனர். மேலும் கைகால்களை இழந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 18 பேரும் சக்கர நாற்காலியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இது தவிர இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 ஆயிரம் பேரும் சண்டிகரில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஒரு மாதமாக சண்டிகரில் உள்ள அறிவுசார் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிறுவனம் (கிரிட்) சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் யோகா குரு ராம்தேவ் பங்கேற்கும் யோகா தின நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. அங்குள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் சுமார் 3 ஆயிரம் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதே நாளில் நாடு முழுவதும் மத்திய ரிசர்வ் போலீஸ், சிஐஎஸ்எப், எஸ்எஸ்பி உள்ளிட்ட பல்வேறு படை பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் வீரர்கள் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

1 comment: