FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, June 4, 2016

கட்டாய சுங்க கட்டணத்திற்கு மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு

01.06.2016, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற 1976ல் அரசாணை வெளியிடப்பட்டாலும், அது செயல்படுத்தாத நிலை உள்ளது என்று கூறி தமிழக மாற்றுத் திறனுடையோர் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

2003ல் மத்திய அரசின் சுற்றிக்கையில் 40 சதவீதத்திற்கு மேல் ஊனமுற்றவர்கள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை, அவர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையும் செயல்பாட்டில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

சமீபமாக மாற்றுத் திறனாளிகள் சிலர் தஞ்சாவூரில் சுங்க கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகள் பின்பற்றப்படாத நிலையை எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

தமிழக மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சிம்மச்சந்திரன் பி.பி.சியிடம் பேசுகையில், ''இந்த விவகாரத்தில், மத்திய போக்குவரத்து துறையின் மாநில அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தாலும், அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.

அவர் பி.ஜே.பி அலுவலகத்திற்கு வரும் நாளில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம். அமைச்சர் இடங்களில் எல்லாம் எங்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்,'' என்றார்.

இது குறித்து அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் கருத்து கேட்டபோது, ''மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் பேசி விரைவாக முடிவு எடுக்கப்படும்,'' என பொன். ராதாகிருஷ்ணன் பி பி சி யிடம் கூறினார்


No comments:

Post a Comment