FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, June 4, 2016

கட்டாய சுங்க கட்டணத்திற்கு மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு

01.06.2016, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற 1976ல் அரசாணை வெளியிடப்பட்டாலும், அது செயல்படுத்தாத நிலை உள்ளது என்று கூறி தமிழக மாற்றுத் திறனுடையோர் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

2003ல் மத்திய அரசின் சுற்றிக்கையில் 40 சதவீதத்திற்கு மேல் ஊனமுற்றவர்கள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை, அவர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையும் செயல்பாட்டில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

சமீபமாக மாற்றுத் திறனாளிகள் சிலர் தஞ்சாவூரில் சுங்க கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகள் பின்பற்றப்படாத நிலையை எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

தமிழக மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சிம்மச்சந்திரன் பி.பி.சியிடம் பேசுகையில், ''இந்த விவகாரத்தில், மத்திய போக்குவரத்து துறையின் மாநில அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தாலும், அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.

அவர் பி.ஜே.பி அலுவலகத்திற்கு வரும் நாளில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம். அமைச்சர் இடங்களில் எல்லாம் எங்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்,'' என்றார்.

இது குறித்து அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் கருத்து கேட்டபோது, ''மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் பேசி விரைவாக முடிவு எடுக்கப்படும்,'' என பொன். ராதாகிருஷ்ணன் பி பி சி யிடம் கூறினார்


No comments:

Post a Comment