FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, June 4, 2016

கட்டாய சுங்க கட்டணத்திற்கு மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு

01.06.2016, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற 1976ல் அரசாணை வெளியிடப்பட்டாலும், அது செயல்படுத்தாத நிலை உள்ளது என்று கூறி தமிழக மாற்றுத் திறனுடையோர் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

2003ல் மத்திய அரசின் சுற்றிக்கையில் 40 சதவீதத்திற்கு மேல் ஊனமுற்றவர்கள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை, அவர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையும் செயல்பாட்டில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

சமீபமாக மாற்றுத் திறனாளிகள் சிலர் தஞ்சாவூரில் சுங்க கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகள் பின்பற்றப்படாத நிலையை எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

தமிழக மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சிம்மச்சந்திரன் பி.பி.சியிடம் பேசுகையில், ''இந்த விவகாரத்தில், மத்திய போக்குவரத்து துறையின் மாநில அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தாலும், அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.

அவர் பி.ஜே.பி அலுவலகத்திற்கு வரும் நாளில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம். அமைச்சர் இடங்களில் எல்லாம் எங்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்,'' என்றார்.

இது குறித்து அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் கருத்து கேட்டபோது, ''மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் பேசி விரைவாக முடிவு எடுக்கப்படும்,'' என பொன். ராதாகிருஷ்ணன் பி பி சி யிடம் கூறினார்


No comments:

Post a Comment