FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, June 4, 2016

கட்டாய சுங்க கட்டணத்திற்கு மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு

01.06.2016, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற 1976ல் அரசாணை வெளியிடப்பட்டாலும், அது செயல்படுத்தாத நிலை உள்ளது என்று கூறி தமிழக மாற்றுத் திறனுடையோர் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

2003ல் மத்திய அரசின் சுற்றிக்கையில் 40 சதவீதத்திற்கு மேல் ஊனமுற்றவர்கள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை, அவர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையும் செயல்பாட்டில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

சமீபமாக மாற்றுத் திறனாளிகள் சிலர் தஞ்சாவூரில் சுங்க கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகள் பின்பற்றப்படாத நிலையை எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

தமிழக மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சிம்மச்சந்திரன் பி.பி.சியிடம் பேசுகையில், ''இந்த விவகாரத்தில், மத்திய போக்குவரத்து துறையின் மாநில அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தாலும், அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.

அவர் பி.ஜே.பி அலுவலகத்திற்கு வரும் நாளில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம். அமைச்சர் இடங்களில் எல்லாம் எங்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்,'' என்றார்.

இது குறித்து அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் கருத்து கேட்டபோது, ''மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் பேசி விரைவாக முடிவு எடுக்கப்படும்,'' என பொன். ராதாகிருஷ்ணன் பி பி சி யிடம் கூறினார்


No comments:

Post a Comment