FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, June 4, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் வலியுறுத்தல்

02.06.2016
மாற்றுத் திறனாளிகளுக்கு நாடு தழுவிய பொது அடையாள அட்டை (யுனிவெர்சல் ஐடென்டிட்டி கார்டு - யுஐசி) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான பயனாளிகளை விரைந்து அடையாளம் காணுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண் டுள்ளது.

மாநில சமூக நலத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர் கள் மாநாடு டெல்லி, விக்யான் பவனில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:

பல்வேறு அரசுத் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் பொது அடையாள அட்டை வழங்க உள் ளோம். இதற்கான வடிவமைப்பை அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் செய் துள்ளது.

அடையாள அட்டை தொடர்பான அனைத்து முன்னேற் பாடுகளும் முடிந்துள்ளன. மாற்றுத் திறனாளிகளை அடையாளம் காணும் பணியை மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு விரைவுபடுத்தினால் அடுத்த 1 அல்லது ஒன்றரை ஆண்டுக்குள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பொது அடையாள அட்டை வழங்கிவிடலாம்.

இந்த பொது அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப் படும். இந்தப் புள்ளி விவரங்கள் ஆன்லைனில் கிடைக்கும் என்பதால் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும்.

மாற்றுத்திறன் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற் கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கடந்த 2014-15-ம் நிதியாண்டில் தொடங்கியுள்ளது. இவற்றின் பயன் களை தகுதியுடைய அனைத்து மாணவர்களும் பெறவேண்டும் என்பதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இத்தகைய மாணவர் களை அடையாளம் காண்பதற்கு மாநில அரசுகள் வரும் கல்வி யாண்டு முதல் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை வினி யோகத்தில் தாமதம் மற்றும் பிற குறைபாடுகளை தவிர்க்க, பய னாளியின் வங்கிக் கணக்கில் தொகையை நேரடியாக செலுத்தும் திட்டத்தை எனது அமைச்சகம் பின்பற்றி வருகிறது.

இவ்வாறு தாவர் சந்த் கெலாட் கூறினார்.

No comments:

Post a Comment