FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, June 4, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் வலியுறுத்தல்

02.06.2016
மாற்றுத் திறனாளிகளுக்கு நாடு தழுவிய பொது அடையாள அட்டை (யுனிவெர்சல் ஐடென்டிட்டி கார்டு - யுஐசி) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான பயனாளிகளை விரைந்து அடையாளம் காணுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண் டுள்ளது.

மாநில சமூக நலத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர் கள் மாநாடு டெல்லி, விக்யான் பவனில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:

பல்வேறு அரசுத் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் பொது அடையாள அட்டை வழங்க உள் ளோம். இதற்கான வடிவமைப்பை அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் செய் துள்ளது.

அடையாள அட்டை தொடர்பான அனைத்து முன்னேற் பாடுகளும் முடிந்துள்ளன. மாற்றுத் திறனாளிகளை அடையாளம் காணும் பணியை மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு விரைவுபடுத்தினால் அடுத்த 1 அல்லது ஒன்றரை ஆண்டுக்குள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பொது அடையாள அட்டை வழங்கிவிடலாம்.

இந்த பொது அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப் படும். இந்தப் புள்ளி விவரங்கள் ஆன்லைனில் கிடைக்கும் என்பதால் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும்.

மாற்றுத்திறன் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற் கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கடந்த 2014-15-ம் நிதியாண்டில் தொடங்கியுள்ளது. இவற்றின் பயன் களை தகுதியுடைய அனைத்து மாணவர்களும் பெறவேண்டும் என்பதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இத்தகைய மாணவர் களை அடையாளம் காண்பதற்கு மாநில அரசுகள் வரும் கல்வி யாண்டு முதல் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை வினி யோகத்தில் தாமதம் மற்றும் பிற குறைபாடுகளை தவிர்க்க, பய னாளியின் வங்கிக் கணக்கில் தொகையை நேரடியாக செலுத்தும் திட்டத்தை எனது அமைச்சகம் பின்பற்றி வருகிறது.

இவ்வாறு தாவர் சந்த் கெலாட் கூறினார்.

No comments:

Post a Comment