FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, June 4, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் வலியுறுத்தல்

02.06.2016
மாற்றுத் திறனாளிகளுக்கு நாடு தழுவிய பொது அடையாள அட்டை (யுனிவெர்சல் ஐடென்டிட்டி கார்டு - யுஐசி) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான பயனாளிகளை விரைந்து அடையாளம் காணுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண் டுள்ளது.

மாநில சமூக நலத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர் கள் மாநாடு டெல்லி, விக்யான் பவனில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:

பல்வேறு அரசுத் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் பொது அடையாள அட்டை வழங்க உள் ளோம். இதற்கான வடிவமைப்பை அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் செய் துள்ளது.

அடையாள அட்டை தொடர்பான அனைத்து முன்னேற் பாடுகளும் முடிந்துள்ளன. மாற்றுத் திறனாளிகளை அடையாளம் காணும் பணியை மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு விரைவுபடுத்தினால் அடுத்த 1 அல்லது ஒன்றரை ஆண்டுக்குள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பொது அடையாள அட்டை வழங்கிவிடலாம்.

இந்த பொது அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப் படும். இந்தப் புள்ளி விவரங்கள் ஆன்லைனில் கிடைக்கும் என்பதால் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும்.

மாற்றுத்திறன் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற் கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கடந்த 2014-15-ம் நிதியாண்டில் தொடங்கியுள்ளது. இவற்றின் பயன் களை தகுதியுடைய அனைத்து மாணவர்களும் பெறவேண்டும் என்பதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இத்தகைய மாணவர் களை அடையாளம் காண்பதற்கு மாநில அரசுகள் வரும் கல்வி யாண்டு முதல் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை வினி யோகத்தில் தாமதம் மற்றும் பிற குறைபாடுகளை தவிர்க்க, பய னாளியின் வங்கிக் கணக்கில் தொகையை நேரடியாக செலுத்தும் திட்டத்தை எனது அமைச்சகம் பின்பற்றி வருகிறது.

இவ்வாறு தாவர் சந்த் கெலாட் கூறினார்.

No comments:

Post a Comment