FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, June 28, 2016

பெற்றோரின் எதிர்ப்பை மீறி பார்வையற்ற ஜோடி திருமணம்

27.06.2016, சென்னை: மதுராந்தகத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பார்வையற்றவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மதுராந்தகம் அடுத்த பாக்கம், தாதங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி. இவரது மகள் உகந்தாய் (30). திருப்பத்தூரை சேர்ந்தவர் குழந்தையப்பன். இவரது மகன் தருமன் (34). இருவரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். தன்னம்பிக்கை முகாம்களில் பங்கேற்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதையடுத்து தருமன் உகந்தாயை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இதற்கு அவரது வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். தன்னை காதலியோடு சேர்த்து வைக்க பெற்றோரை தருமன் வலியுறுத்தினார். அதற்கு அவர்கள், ‘‘உனக்கும் கண் தெரியாது. பார்வையற்ற பெண்னை திருமணம் செய்து கொண்டு என்ன செய்வாய்? எனக்கூறி திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். 

இந்நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் அருகே இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் தருமன் வீட்டார் கலந்து கொள்ளவில்லை. பெண் வீட்டார் மட்டும் வந்திருந்தனர். ராமர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும், புதுமண தம்பதியை வாழ்த்தி சென்றது, நெகிழ்ச்சிகரமாக இருந்தது. புது மாப்பிள்ளை தருமன் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு, சென்னை புறநகர் ரயிலில் வியாபாரம் செய்து வருகிறேன். எங்களது திருமணத்திற்கு வீட்டில் உள்ளவர்கள் சம்மதிக்கவில்லை. அதனால், கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். பக்தர்களின் வாழ்த்து, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான புதிய நம்பிக்கையை எங்களுக்கு தந்துள்ளது. எனது மனைவியை சந்தோஷமாக வைத்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment