FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, June 28, 2016

பெற்றோரின் எதிர்ப்பை மீறி பார்வையற்ற ஜோடி திருமணம்

27.06.2016, சென்னை: மதுராந்தகத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பார்வையற்றவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மதுராந்தகம் அடுத்த பாக்கம், தாதங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி. இவரது மகள் உகந்தாய் (30). திருப்பத்தூரை சேர்ந்தவர் குழந்தையப்பன். இவரது மகன் தருமன் (34). இருவரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். தன்னம்பிக்கை முகாம்களில் பங்கேற்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதையடுத்து தருமன் உகந்தாயை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இதற்கு அவரது வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். தன்னை காதலியோடு சேர்த்து வைக்க பெற்றோரை தருமன் வலியுறுத்தினார். அதற்கு அவர்கள், ‘‘உனக்கும் கண் தெரியாது. பார்வையற்ற பெண்னை திருமணம் செய்து கொண்டு என்ன செய்வாய்? எனக்கூறி திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். 

இந்நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் அருகே இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் தருமன் வீட்டார் கலந்து கொள்ளவில்லை. பெண் வீட்டார் மட்டும் வந்திருந்தனர். ராமர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும், புதுமண தம்பதியை வாழ்த்தி சென்றது, நெகிழ்ச்சிகரமாக இருந்தது. புது மாப்பிள்ளை தருமன் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு, சென்னை புறநகர் ரயிலில் வியாபாரம் செய்து வருகிறேன். எங்களது திருமணத்திற்கு வீட்டில் உள்ளவர்கள் சம்மதிக்கவில்லை. அதனால், கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். பக்தர்களின் வாழ்த்து, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான புதிய நம்பிக்கையை எங்களுக்கு தந்துள்ளது. எனது மனைவியை சந்தோஷமாக வைத்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment