FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, June 28, 2016

பெற்றோரின் எதிர்ப்பை மீறி பார்வையற்ற ஜோடி திருமணம்

27.06.2016, சென்னை: மதுராந்தகத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பார்வையற்றவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மதுராந்தகம் அடுத்த பாக்கம், தாதங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி. இவரது மகள் உகந்தாய் (30). திருப்பத்தூரை சேர்ந்தவர் குழந்தையப்பன். இவரது மகன் தருமன் (34). இருவரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். தன்னம்பிக்கை முகாம்களில் பங்கேற்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதையடுத்து தருமன் உகந்தாயை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இதற்கு அவரது வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். தன்னை காதலியோடு சேர்த்து வைக்க பெற்றோரை தருமன் வலியுறுத்தினார். அதற்கு அவர்கள், ‘‘உனக்கும் கண் தெரியாது. பார்வையற்ற பெண்னை திருமணம் செய்து கொண்டு என்ன செய்வாய்? எனக்கூறி திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். 

இந்நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் அருகே இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் தருமன் வீட்டார் கலந்து கொள்ளவில்லை. பெண் வீட்டார் மட்டும் வந்திருந்தனர். ராமர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும், புதுமண தம்பதியை வாழ்த்தி சென்றது, நெகிழ்ச்சிகரமாக இருந்தது. புது மாப்பிள்ளை தருமன் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு, சென்னை புறநகர் ரயிலில் வியாபாரம் செய்து வருகிறேன். எங்களது திருமணத்திற்கு வீட்டில் உள்ளவர்கள் சம்மதிக்கவில்லை. அதனால், கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். பக்தர்களின் வாழ்த்து, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான புதிய நம்பிக்கையை எங்களுக்கு தந்துள்ளது. எனது மனைவியை சந்தோஷமாக வைத்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment