FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, June 28, 2016

பெற்றோரின் எதிர்ப்பை மீறி பார்வையற்ற ஜோடி திருமணம்

27.06.2016, சென்னை: மதுராந்தகத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பார்வையற்றவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மதுராந்தகம் அடுத்த பாக்கம், தாதங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி. இவரது மகள் உகந்தாய் (30). திருப்பத்தூரை சேர்ந்தவர் குழந்தையப்பன். இவரது மகன் தருமன் (34). இருவரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். தன்னம்பிக்கை முகாம்களில் பங்கேற்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதையடுத்து தருமன் உகந்தாயை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இதற்கு அவரது வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். தன்னை காதலியோடு சேர்த்து வைக்க பெற்றோரை தருமன் வலியுறுத்தினார். அதற்கு அவர்கள், ‘‘உனக்கும் கண் தெரியாது. பார்வையற்ற பெண்னை திருமணம் செய்து கொண்டு என்ன செய்வாய்? எனக்கூறி திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். 

இந்நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் அருகே இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் தருமன் வீட்டார் கலந்து கொள்ளவில்லை. பெண் வீட்டார் மட்டும் வந்திருந்தனர். ராமர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும், புதுமண தம்பதியை வாழ்த்தி சென்றது, நெகிழ்ச்சிகரமாக இருந்தது. புது மாப்பிள்ளை தருமன் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு, சென்னை புறநகர் ரயிலில் வியாபாரம் செய்து வருகிறேன். எங்களது திருமணத்திற்கு வீட்டில் உள்ளவர்கள் சம்மதிக்கவில்லை. அதனால், கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். பக்தர்களின் வாழ்த்து, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான புதிய நம்பிக்கையை எங்களுக்கு தந்துள்ளது. எனது மனைவியை சந்தோஷமாக வைத்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment