FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, June 14, 2016

"36 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை'



13.06.2016
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 36,136 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்துப் பேசியது:

மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்த வரையில் தேசிய அடையாள அட்டை மிக, மிக முக்கியமான ஒன்று. இதை வாங்கினால், அரசால் வழங்கப்படும் சலுகைகளைப் பெற முடியும். இதுவரை தேசிய அடையாள அட்டை வாங்காதவர்கள் திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தால் அங்கேயே, ஊனத்தின் தன்மை அளவிடப்பட்டு அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு 90 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 36,136 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 60 சதம் ஊனம் உள்ளவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதல்வர் உத்தரவின்படி 40 சதம் ஊனம் உள்ளவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இது தவிர கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, தொழில் தொடங்க மானியத்துடன் கடன்உதவி, அரசு வேலைவாய்ப்பில் 3 சத இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது என்றார்.

தொடர்ந்து, 169 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 25 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

முன்னதாக பேசிய நாமக்கல் எம்.பி பி.ஆர்.சுந்தரம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5.70 லட்சம் மதிப்பில் ஸ்கூட்டர் வழங்குவதாக அறிவித்தார்.

இதில், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கவிதா சந்திரன், அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எம்.அண்ணாதுரை நன்றி கூறினார்.

No comments:

Post a Comment