FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, June 14, 2016

"36 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை'



13.06.2016
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 36,136 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்துப் பேசியது:

மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்த வரையில் தேசிய அடையாள அட்டை மிக, மிக முக்கியமான ஒன்று. இதை வாங்கினால், அரசால் வழங்கப்படும் சலுகைகளைப் பெற முடியும். இதுவரை தேசிய அடையாள அட்டை வாங்காதவர்கள் திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தால் அங்கேயே, ஊனத்தின் தன்மை அளவிடப்பட்டு அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு 90 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 36,136 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 60 சதம் ஊனம் உள்ளவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதல்வர் உத்தரவின்படி 40 சதம் ஊனம் உள்ளவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இது தவிர கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, தொழில் தொடங்க மானியத்துடன் கடன்உதவி, அரசு வேலைவாய்ப்பில் 3 சத இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது என்றார்.

தொடர்ந்து, 169 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 25 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

முன்னதாக பேசிய நாமக்கல் எம்.பி பி.ஆர்.சுந்தரம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5.70 லட்சம் மதிப்பில் ஸ்கூட்டர் வழங்குவதாக அறிவித்தார்.

இதில், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கவிதா சந்திரன், அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எம்.அண்ணாதுரை நன்றி கூறினார்.

No comments:

Post a Comment