FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, June 14, 2016

"36 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை'



13.06.2016
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 36,136 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்துப் பேசியது:

மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்த வரையில் தேசிய அடையாள அட்டை மிக, மிக முக்கியமான ஒன்று. இதை வாங்கினால், அரசால் வழங்கப்படும் சலுகைகளைப் பெற முடியும். இதுவரை தேசிய அடையாள அட்டை வாங்காதவர்கள் திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தால் அங்கேயே, ஊனத்தின் தன்மை அளவிடப்பட்டு அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு 90 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 36,136 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 60 சதம் ஊனம் உள்ளவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதல்வர் உத்தரவின்படி 40 சதம் ஊனம் உள்ளவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இது தவிர கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, தொழில் தொடங்க மானியத்துடன் கடன்உதவி, அரசு வேலைவாய்ப்பில் 3 சத இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது என்றார்.

தொடர்ந்து, 169 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 25 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

முன்னதாக பேசிய நாமக்கல் எம்.பி பி.ஆர்.சுந்தரம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5.70 லட்சம் மதிப்பில் ஸ்கூட்டர் வழங்குவதாக அறிவித்தார்.

இதில், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கவிதா சந்திரன், அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எம்.அண்ணாதுரை நன்றி கூறினார்.

No comments:

Post a Comment