FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, June 14, 2016

"36 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை'



13.06.2016
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 36,136 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்துப் பேசியது:

மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்த வரையில் தேசிய அடையாள அட்டை மிக, மிக முக்கியமான ஒன்று. இதை வாங்கினால், அரசால் வழங்கப்படும் சலுகைகளைப் பெற முடியும். இதுவரை தேசிய அடையாள அட்டை வாங்காதவர்கள் திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தால் அங்கேயே, ஊனத்தின் தன்மை அளவிடப்பட்டு அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு 90 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 36,136 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 60 சதம் ஊனம் உள்ளவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதல்வர் உத்தரவின்படி 40 சதம் ஊனம் உள்ளவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இது தவிர கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, தொழில் தொடங்க மானியத்துடன் கடன்உதவி, அரசு வேலைவாய்ப்பில் 3 சத இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது என்றார்.

தொடர்ந்து, 169 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 25 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

முன்னதாக பேசிய நாமக்கல் எம்.பி பி.ஆர்.சுந்தரம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5.70 லட்சம் மதிப்பில் ஸ்கூட்டர் வழங்குவதாக அறிவித்தார்.

இதில், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கவிதா சந்திரன், அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எம்.அண்ணாதுரை நன்றி கூறினார்.

No comments:

Post a Comment