FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, June 4, 2016

மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

01.06.2016
திருவண்ணாமலை மாவட்டத்தில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களைப் பெற தகுதியான மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 2015-16ஆம் நிதியாண்டுக்கான மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள், செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, பின்னர் தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

இந்த தையல் இயந்திரங்களைப் பெற விருப்பமும், தகுதியும் உள்ள 18 முதல் 45 வயது வரையுள்ள மாற்றுத் திறனாளிகள் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறலாம். விண்ணப்பதாரர்கள் தையல் பயிற்சியில் தேர்ச்சி பெற்று சான்று பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வயது சான்று, தையல் தேர்ச்சி பெற்ற சான்று, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒரு வாரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment