FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, June 4, 2016

மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

01.06.2016
திருவண்ணாமலை மாவட்டத்தில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களைப் பெற தகுதியான மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 2015-16ஆம் நிதியாண்டுக்கான மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள், செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, பின்னர் தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

இந்த தையல் இயந்திரங்களைப் பெற விருப்பமும், தகுதியும் உள்ள 18 முதல் 45 வயது வரையுள்ள மாற்றுத் திறனாளிகள் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறலாம். விண்ணப்பதாரர்கள் தையல் பயிற்சியில் தேர்ச்சி பெற்று சான்று பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வயது சான்று, தையல் தேர்ச்சி பெற்ற சான்று, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒரு வாரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment