FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, June 17, 2016

மாற்றுத் திறனாளிகளின் உற்பத்திப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விற்க கோரிக்கை



15.06.2016, மாற்றுத்திறனாளிகளின்  உற்பத்திப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் சி.கே.சந்தோஷ், பொதுச் செயலர் பொன்.சண்முகம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் உற்பத்தி செய்யும் ஊதுவத்தி, சோப்பு, பினாயில், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருள்களை தமிழக அரசு பெற்று அதனை நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைத்திட வாய்ப்பு கிட்டும்.

மேலும், பேருந்து நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்திடும் வகையில் தனிக்கடைகள் வழங்கிட வேண்டும். கடலூரில் மாற்றுத்திறனாளிகள் தங்கி தொழில் செய்திடும் வகையில் தனி விடுதி ஏற்படுத்த வேண்டும். மேலும், அவர்கள் தொழிற்பயிற்சி மேற்கொள்ள தனியாக தொழிற்பயிற்சிக் கூடங்கள் அமைத்திட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கிட ஏதுவாக வங்கிகளில் ரூ.1 லட்சம் வரையில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் தணிகவேல், தில்லைநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment