FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, June 17, 2016

மாற்றுத் திறனாளிகளின் உற்பத்திப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விற்க கோரிக்கை



15.06.2016, மாற்றுத்திறனாளிகளின்  உற்பத்திப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் சி.கே.சந்தோஷ், பொதுச் செயலர் பொன்.சண்முகம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் உற்பத்தி செய்யும் ஊதுவத்தி, சோப்பு, பினாயில், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருள்களை தமிழக அரசு பெற்று அதனை நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைத்திட வாய்ப்பு கிட்டும்.

மேலும், பேருந்து நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்திடும் வகையில் தனிக்கடைகள் வழங்கிட வேண்டும். கடலூரில் மாற்றுத்திறனாளிகள் தங்கி தொழில் செய்திடும் வகையில் தனி விடுதி ஏற்படுத்த வேண்டும். மேலும், அவர்கள் தொழிற்பயிற்சி மேற்கொள்ள தனியாக தொழிற்பயிற்சிக் கூடங்கள் அமைத்திட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கிட ஏதுவாக வங்கிகளில் ரூ.1 லட்சம் வரையில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் தணிகவேல், தில்லைநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment