FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, June 17, 2016

மாற்றுத் திறனாளிகளின் உற்பத்திப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விற்க கோரிக்கை



15.06.2016, மாற்றுத்திறனாளிகளின்  உற்பத்திப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் சி.கே.சந்தோஷ், பொதுச் செயலர் பொன்.சண்முகம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் உற்பத்தி செய்யும் ஊதுவத்தி, சோப்பு, பினாயில், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருள்களை தமிழக அரசு பெற்று அதனை நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைத்திட வாய்ப்பு கிட்டும்.

மேலும், பேருந்து நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்திடும் வகையில் தனிக்கடைகள் வழங்கிட வேண்டும். கடலூரில் மாற்றுத்திறனாளிகள் தங்கி தொழில் செய்திடும் வகையில் தனி விடுதி ஏற்படுத்த வேண்டும். மேலும், அவர்கள் தொழிற்பயிற்சி மேற்கொள்ள தனியாக தொழிற்பயிற்சிக் கூடங்கள் அமைத்திட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கிட ஏதுவாக வங்கிகளில் ரூ.1 லட்சம் வரையில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் தணிகவேல், தில்லைநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment