FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, June 17, 2016

மாற்றுத் திறனாளிகளின் உற்பத்திப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விற்க கோரிக்கை



15.06.2016, மாற்றுத்திறனாளிகளின்  உற்பத்திப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் சி.கே.சந்தோஷ், பொதுச் செயலர் பொன்.சண்முகம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் உற்பத்தி செய்யும் ஊதுவத்தி, சோப்பு, பினாயில், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருள்களை தமிழக அரசு பெற்று அதனை நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைத்திட வாய்ப்பு கிட்டும்.

மேலும், பேருந்து நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்திடும் வகையில் தனிக்கடைகள் வழங்கிட வேண்டும். கடலூரில் மாற்றுத்திறனாளிகள் தங்கி தொழில் செய்திடும் வகையில் தனி விடுதி ஏற்படுத்த வேண்டும். மேலும், அவர்கள் தொழிற்பயிற்சி மேற்கொள்ள தனியாக தொழிற்பயிற்சிக் கூடங்கள் அமைத்திட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கிட ஏதுவாக வங்கிகளில் ரூ.1 லட்சம் வரையில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் தணிகவேல், தில்லைநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment