FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, June 14, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

14.06.2016
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் துறையின் வேலை வாய்ப்பு பெறும் விதமாக வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி ஜீன் மாதம் 17.06.2016 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ பயின்று சான்றிதழ் பெற்றவர்கள், கல்வித்தகுதி உடையவர்கள் மேலும் இது போன்ற அனைத்து கல்வித் தகுதி உடையவர்களுக்கும் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இதில் பிட்டர், டர்னர், கம்ப்யூட்டர் ஆப்புரேட்டர், டெய்லர், டேட்டா என்ட்ரி ஆப்புரேட்டர் போன்ற தொழிற்கல்வி பயின்றவர் வரை அனைத்து கல்வித் தகுதி உடைய மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இந்நிகழ்ச்சியில் தனியார் துறையில் வேலையளிப்போர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான மாற்றுத்திறனாளி பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மனூதாரர்கள் வேலையளிப்பவருக்கு எந்தவித கட்டணமும் அளிக்க தேவையில்லை. இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சி மூலம் வேலை பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.

17.06.2016 அன்று காலை 10.30 மணி முதல் 4.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று பயன் அடையலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிக்கிறார்.


No comments:

Post a Comment