FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, June 14, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

14.06.2016
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் துறையின் வேலை வாய்ப்பு பெறும் விதமாக வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி ஜீன் மாதம் 17.06.2016 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ பயின்று சான்றிதழ் பெற்றவர்கள், கல்வித்தகுதி உடையவர்கள் மேலும் இது போன்ற அனைத்து கல்வித் தகுதி உடையவர்களுக்கும் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இதில் பிட்டர், டர்னர், கம்ப்யூட்டர் ஆப்புரேட்டர், டெய்லர், டேட்டா என்ட்ரி ஆப்புரேட்டர் போன்ற தொழிற்கல்வி பயின்றவர் வரை அனைத்து கல்வித் தகுதி உடைய மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இந்நிகழ்ச்சியில் தனியார் துறையில் வேலையளிப்போர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான மாற்றுத்திறனாளி பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மனூதாரர்கள் வேலையளிப்பவருக்கு எந்தவித கட்டணமும் அளிக்க தேவையில்லை. இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சி மூலம் வேலை பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.

17.06.2016 அன்று காலை 10.30 மணி முதல் 4.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று பயன் அடையலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிக்கிறார்.


No comments:

Post a Comment