FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, June 11, 2016

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

11.06.2016
திருப்பூரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 98 பேருக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலைப் பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி, ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் முகாமில் பங்கேற்றனர்.

பின்னலாடை உற்பத்தி உள்பட 16 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனத்துக்குத் தேவையான நபர்களை தேர்வு செய்தனர். முகாமில் மொத்தம் 188 பேர் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 98 பேருக்கு பணி நியமன கடிதங்களை திருப்பூர் ஆட்சியர் ச.ஜெயந்தி வழங்கினார். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காளிமுத்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.



No comments:

Post a Comment