FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, June 8, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையுடன் பல்லூடகப் பயிற்சி



மதுரை, 05 June 2016
மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடகப் பயிற்சி, புகைப்படப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் உள்ள 16 வயதில் இருந்து 40 வயதுக்கு உள்பட்ட கை-கால் குறைபாடுடைய மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடகப் பயிற்சி, புகைப்படப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலமாக ஒரு மாதம் இப் பயிற்சி அளிக்கப்படும்.

இப் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊனத்தின் தன்மை 40 சதவீதத்துக்கு மேல் உள்ள, தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் ரூ.1000 (ஒரு மாதத்துக்கு) உதவித் தொகையாக வழங்கப்படும்.

தகுதியான நபர்கள் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

பயிற்சியில் சேர ஜூன் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment