FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, June 8, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையுடன் பல்லூடகப் பயிற்சி



மதுரை, 05 June 2016
மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடகப் பயிற்சி, புகைப்படப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் உள்ள 16 வயதில் இருந்து 40 வயதுக்கு உள்பட்ட கை-கால் குறைபாடுடைய மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடகப் பயிற்சி, புகைப்படப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலமாக ஒரு மாதம் இப் பயிற்சி அளிக்கப்படும்.

இப் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊனத்தின் தன்மை 40 சதவீதத்துக்கு மேல் உள்ள, தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் ரூ.1000 (ஒரு மாதத்துக்கு) உதவித் தொகையாக வழங்கப்படும்.

தகுதியான நபர்கள் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

பயிற்சியில் சேர ஜூன் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment