FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, June 23, 2016

'அரசு வளாகங்களில் பணி தாருங்கள்': மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

22.06.2016, ஈரோடு: 'காலிப்பணியிடங்கள், அரசு வளாகங்களில் உள்ள வேலைகளை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்' என வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச்சங்கம் சார்பில், முதல்வர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்களிடமும் மனு வழங்கினர்.

இது குறித்து, மாவட்ட தலைவர் துரைராஜ் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், மனநலம் பாதிக்கப்பட்டோரின் பெற்றோர், கணவன், மனைவி போன்றோருக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர். எனவே, தனியாக ஒரு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டித்தர வேண்டும். உள்ளாட்சிகள் மற்றும் அரசு சார்ந்த ஒப்பந்த பணிகள், வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற பணிகளை ஒதுக்க வேண்டும். வணிக வளாக கடைகளை ஏலத்துக்கு விடும்போது, குறிப்பிட்ட கடைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பயிற்சி மையம் அமைக்க வேண்டும். உள்ளாட்சி துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு, மூன்று சதவீத இடஒதுக்கீட்டின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில், ஆண்டுக்கு தலா, ஐந்து லட்சம் ரூபாய்க்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி, அவர்களுக்கான உபகரணங்கள், தொழில் துவங்கும் உதவி போன்றவைகள் முறையாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment