FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, June 23, 2016

'அரசு வளாகங்களில் பணி தாருங்கள்': மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

22.06.2016, ஈரோடு: 'காலிப்பணியிடங்கள், அரசு வளாகங்களில் உள்ள வேலைகளை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்' என வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச்சங்கம் சார்பில், முதல்வர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்களிடமும் மனு வழங்கினர்.

இது குறித்து, மாவட்ட தலைவர் துரைராஜ் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், மனநலம் பாதிக்கப்பட்டோரின் பெற்றோர், கணவன், மனைவி போன்றோருக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர். எனவே, தனியாக ஒரு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டித்தர வேண்டும். உள்ளாட்சிகள் மற்றும் அரசு சார்ந்த ஒப்பந்த பணிகள், வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற பணிகளை ஒதுக்க வேண்டும். வணிக வளாக கடைகளை ஏலத்துக்கு விடும்போது, குறிப்பிட்ட கடைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பயிற்சி மையம் அமைக்க வேண்டும். உள்ளாட்சி துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு, மூன்று சதவீத இடஒதுக்கீட்டின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில், ஆண்டுக்கு தலா, ஐந்து லட்சம் ரூபாய்க்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி, அவர்களுக்கான உபகரணங்கள், தொழில் துவங்கும் உதவி போன்றவைகள் முறையாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment