FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, June 23, 2016

'அரசு வளாகங்களில் பணி தாருங்கள்': மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

22.06.2016, ஈரோடு: 'காலிப்பணியிடங்கள், அரசு வளாகங்களில் உள்ள வேலைகளை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்' என வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச்சங்கம் சார்பில், முதல்வர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்களிடமும் மனு வழங்கினர்.

இது குறித்து, மாவட்ட தலைவர் துரைராஜ் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், மனநலம் பாதிக்கப்பட்டோரின் பெற்றோர், கணவன், மனைவி போன்றோருக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர். எனவே, தனியாக ஒரு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டித்தர வேண்டும். உள்ளாட்சிகள் மற்றும் அரசு சார்ந்த ஒப்பந்த பணிகள், வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற பணிகளை ஒதுக்க வேண்டும். வணிக வளாக கடைகளை ஏலத்துக்கு விடும்போது, குறிப்பிட்ட கடைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பயிற்சி மையம் அமைக்க வேண்டும். உள்ளாட்சி துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு, மூன்று சதவீத இடஒதுக்கீட்டின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில், ஆண்டுக்கு தலா, ஐந்து லட்சம் ரூபாய்க்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி, அவர்களுக்கான உபகரணங்கள், தொழில் துவங்கும் உதவி போன்றவைகள் முறையாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment