FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, June 4, 2016

ஈரோடு ரெயில் நிலையத்தில் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் மாயம்

02.06.2016, ஈரோடு,
பெரம்பலூர் மாவட்டம் தேவையூரை சேர்ந்தவர் சலிம்கான். இவருடைய மனைவி தஸ்லிம்பேகம். இவர்களுடைய மகன் அஜிம்கான் என்கிற அஜ்மல் (வயது 12). இவன் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன். இந்தநிலையில் சலிம்கான் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு திருமணத்திற்கு சென்றார். திருமணம் முடிந்ததும் அவர்கள் பெரம்பலூர் செல்வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அஜ்மலை அவருடைய பாட்டி மும்தாஜ்பேகம் கையை பிடித்துக்கொண்டு அழைத்து சென்றார். இந்தநிலையில் பிளாட்பாரத்திற்கு செல்லும்போது சிறுவன் அஜ்மல் திடீரென அங்கிருந்து ஓடினான். ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது 3–வது மற்றும் 4–வது பிளாட்பாரங்களில் நின்றிருந்த ரெயில்கள் அடுத்தடுத்து புறப்பட்டு சென்றன. இதனால் அஜ்மல் எந்த ரெயிலில் ஏறிச்சென்றான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து சலிம்கான் தனது மகனை கண்டுபிடித்து தரும்படி ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து அஜ்மலை தேடி வருகிறார்.

No comments:

Post a Comment