FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, June 4, 2016

ஈரோடு ரெயில் நிலையத்தில் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் மாயம்

02.06.2016, ஈரோடு,
பெரம்பலூர் மாவட்டம் தேவையூரை சேர்ந்தவர் சலிம்கான். இவருடைய மனைவி தஸ்லிம்பேகம். இவர்களுடைய மகன் அஜிம்கான் என்கிற அஜ்மல் (வயது 12). இவன் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன். இந்தநிலையில் சலிம்கான் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு திருமணத்திற்கு சென்றார். திருமணம் முடிந்ததும் அவர்கள் பெரம்பலூர் செல்வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அஜ்மலை அவருடைய பாட்டி மும்தாஜ்பேகம் கையை பிடித்துக்கொண்டு அழைத்து சென்றார். இந்தநிலையில் பிளாட்பாரத்திற்கு செல்லும்போது சிறுவன் அஜ்மல் திடீரென அங்கிருந்து ஓடினான். ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது 3–வது மற்றும் 4–வது பிளாட்பாரங்களில் நின்றிருந்த ரெயில்கள் அடுத்தடுத்து புறப்பட்டு சென்றன. இதனால் அஜ்மல் எந்த ரெயிலில் ஏறிச்சென்றான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து சலிம்கான் தனது மகனை கண்டுபிடித்து தரும்படி ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து அஜ்மலை தேடி வருகிறார்.

No comments:

Post a Comment