FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, June 4, 2016

ஈரோடு ரெயில் நிலையத்தில் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் மாயம்

02.06.2016, ஈரோடு,
பெரம்பலூர் மாவட்டம் தேவையூரை சேர்ந்தவர் சலிம்கான். இவருடைய மனைவி தஸ்லிம்பேகம். இவர்களுடைய மகன் அஜிம்கான் என்கிற அஜ்மல் (வயது 12). இவன் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன். இந்தநிலையில் சலிம்கான் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு திருமணத்திற்கு சென்றார். திருமணம் முடிந்ததும் அவர்கள் பெரம்பலூர் செல்வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அஜ்மலை அவருடைய பாட்டி மும்தாஜ்பேகம் கையை பிடித்துக்கொண்டு அழைத்து சென்றார். இந்தநிலையில் பிளாட்பாரத்திற்கு செல்லும்போது சிறுவன் அஜ்மல் திடீரென அங்கிருந்து ஓடினான். ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது 3–வது மற்றும் 4–வது பிளாட்பாரங்களில் நின்றிருந்த ரெயில்கள் அடுத்தடுத்து புறப்பட்டு சென்றன. இதனால் அஜ்மல் எந்த ரெயிலில் ஏறிச்சென்றான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து சலிம்கான் தனது மகனை கண்டுபிடித்து தரும்படி ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து அஜ்மலை தேடி வருகிறார்.

No comments:

Post a Comment