FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, June 4, 2016

ஈரோடு ரெயில் நிலையத்தில் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் மாயம்

02.06.2016, ஈரோடு,
பெரம்பலூர் மாவட்டம் தேவையூரை சேர்ந்தவர் சலிம்கான். இவருடைய மனைவி தஸ்லிம்பேகம். இவர்களுடைய மகன் அஜிம்கான் என்கிற அஜ்மல் (வயது 12). இவன் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன். இந்தநிலையில் சலிம்கான் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு திருமணத்திற்கு சென்றார். திருமணம் முடிந்ததும் அவர்கள் பெரம்பலூர் செல்வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அஜ்மலை அவருடைய பாட்டி மும்தாஜ்பேகம் கையை பிடித்துக்கொண்டு அழைத்து சென்றார். இந்தநிலையில் பிளாட்பாரத்திற்கு செல்லும்போது சிறுவன் அஜ்மல் திடீரென அங்கிருந்து ஓடினான். ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது 3–வது மற்றும் 4–வது பிளாட்பாரங்களில் நின்றிருந்த ரெயில்கள் அடுத்தடுத்து புறப்பட்டு சென்றன. இதனால் அஜ்மல் எந்த ரெயிலில் ஏறிச்சென்றான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து சலிம்கான் தனது மகனை கண்டுபிடித்து தரும்படி ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து அஜ்மலை தேடி வருகிறார்.

No comments:

Post a Comment