FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, June 4, 2016

பிறவியிலேயே காது கேட்காதவர்கள் அரசு டாக்டர்களால் 'கேட்கின்றனர்!'

04.06.2016, மதுரை: மதுரை அரசு மருத்துவமனை, காதுகேளாத ௧௯ குழந்தைகளுக்கு, 'காக்லியர் இம்பிளன்ட்' (உட்செவிச்சுருள் பதியம்) அறுவை சிகிச்சையை இலவசமாக செய்துள்ளது.

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறைத்தலைவர் தினகரன் கூறியதாவது: கடந்த நான்கு மாதத்தில், பிறவியிலேயே காது கேளாத, ௬ வயதிற்குட்பட்ட ௧௯ குழந்தைகளுக்கு 'காக்லியர் இம்பிளன்ட்' அறுவை சிகிச்சையை செய்துள்ளோம். மேலும் 3 குழந்தைகளுக்கு வரும் வாரத்தில் செய்யவுள்ளோம்.

சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளுதல், கருவுற்ற தாயை நோய் தாக்குதல், வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளால் குழந்தைகள் கேட்கும் திறனின்றி பிறக்கின்றனர், என்றார்.

டீன் வைரமுத்து ராஜா கூறியதாவது: சிகிச்சையில் குழந்தைகளின் உடலில் பொருத்தப்படும் கருவியின் மதிப்பு மட்டும் ரூ.௫ லட்சமாகும். தனியார் மருத்துவமனையில் கருவி மற்றும் சிகிச்சைக்கு மொத்தம் ரூ.7 லட்சம் செலவாகும்.

ஆனால், நாங்கள் அரசு காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்கிறோம். ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு சிகிச்சை தேவைப்பட்டால், இலவசமாக செய்ய முடியாது என விதிகள் உள்ளன. ஆனால், நாங்கள் சிறப்பு அனுமதி பெற்று இலவசமாக செய்கிறோம், என்றார்.

No comments:

Post a Comment