FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, June 4, 2016

பிறவியிலேயே காது கேட்காதவர்கள் அரசு டாக்டர்களால் 'கேட்கின்றனர்!'

04.06.2016, மதுரை: மதுரை அரசு மருத்துவமனை, காதுகேளாத ௧௯ குழந்தைகளுக்கு, 'காக்லியர் இம்பிளன்ட்' (உட்செவிச்சுருள் பதியம்) அறுவை சிகிச்சையை இலவசமாக செய்துள்ளது.

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறைத்தலைவர் தினகரன் கூறியதாவது: கடந்த நான்கு மாதத்தில், பிறவியிலேயே காது கேளாத, ௬ வயதிற்குட்பட்ட ௧௯ குழந்தைகளுக்கு 'காக்லியர் இம்பிளன்ட்' அறுவை சிகிச்சையை செய்துள்ளோம். மேலும் 3 குழந்தைகளுக்கு வரும் வாரத்தில் செய்யவுள்ளோம்.

சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளுதல், கருவுற்ற தாயை நோய் தாக்குதல், வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளால் குழந்தைகள் கேட்கும் திறனின்றி பிறக்கின்றனர், என்றார்.

டீன் வைரமுத்து ராஜா கூறியதாவது: சிகிச்சையில் குழந்தைகளின் உடலில் பொருத்தப்படும் கருவியின் மதிப்பு மட்டும் ரூ.௫ லட்சமாகும். தனியார் மருத்துவமனையில் கருவி மற்றும் சிகிச்சைக்கு மொத்தம் ரூ.7 லட்சம் செலவாகும்.

ஆனால், நாங்கள் அரசு காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்கிறோம். ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு சிகிச்சை தேவைப்பட்டால், இலவசமாக செய்ய முடியாது என விதிகள் உள்ளன. ஆனால், நாங்கள் சிறப்பு அனுமதி பெற்று இலவசமாக செய்கிறோம், என்றார்.

No comments:

Post a Comment