FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, June 4, 2016

பிறவியிலேயே காது கேட்காதவர்கள் அரசு டாக்டர்களால் 'கேட்கின்றனர்!'

04.06.2016, மதுரை: மதுரை அரசு மருத்துவமனை, காதுகேளாத ௧௯ குழந்தைகளுக்கு, 'காக்லியர் இம்பிளன்ட்' (உட்செவிச்சுருள் பதியம்) அறுவை சிகிச்சையை இலவசமாக செய்துள்ளது.

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறைத்தலைவர் தினகரன் கூறியதாவது: கடந்த நான்கு மாதத்தில், பிறவியிலேயே காது கேளாத, ௬ வயதிற்குட்பட்ட ௧௯ குழந்தைகளுக்கு 'காக்லியர் இம்பிளன்ட்' அறுவை சிகிச்சையை செய்துள்ளோம். மேலும் 3 குழந்தைகளுக்கு வரும் வாரத்தில் செய்யவுள்ளோம்.

சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளுதல், கருவுற்ற தாயை நோய் தாக்குதல், வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளால் குழந்தைகள் கேட்கும் திறனின்றி பிறக்கின்றனர், என்றார்.

டீன் வைரமுத்து ராஜா கூறியதாவது: சிகிச்சையில் குழந்தைகளின் உடலில் பொருத்தப்படும் கருவியின் மதிப்பு மட்டும் ரூ.௫ லட்சமாகும். தனியார் மருத்துவமனையில் கருவி மற்றும் சிகிச்சைக்கு மொத்தம் ரூ.7 லட்சம் செலவாகும்.

ஆனால், நாங்கள் அரசு காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்கிறோம். ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு சிகிச்சை தேவைப்பட்டால், இலவசமாக செய்ய முடியாது என விதிகள் உள்ளன. ஆனால், நாங்கள் சிறப்பு அனுமதி பெற்று இலவசமாக செய்கிறோம், என்றார்.

No comments:

Post a Comment