FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, June 14, 2016

செவித்திறன் குறைந்த குழந்தைகளை கண்டறிய பரிசோதனை மையம் திறப்பு

திருநெல்வேலி, 08 June 2016, செவித்திறன் குன்றிய மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை ஆரம்ப நிலையில் கண்டறியும் பரிசோதனை மையம் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

பிறந்த குழந்தை முதல் 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் தன்மை இருக்கிறதா இல்லையா என்பதை நவீன கருவிகள், உபகரணங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளவும், தொடர்ந்து அக்குழந்தைகளுக்கு செவித்திறன் குறைவுத் தன்மைக்கு ஏற்ப தகுந்த காதொலிக் கருவிகள் வழங்கும் வகையிலும் திருநெல்வேலியில் ரூ. 5.40 லட்சம் மதிப்பீட்டில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் துறை கட்டுப்பாட்டின் கீழ், திருநெல்வேலியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை ஆட்சியர் மு. கருணாகரன் திறந்துவைத்து, செவித்திறன் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு காதொலிக் கருவிகள் வழங்கினார். இம்மையம் காலை 11 முதல் மாலை 3 மணி வரை செயல்படும். காதொலிக் கருவிகள் பொருத்தப்பட்ட குழந்தைகள் அரசால் நடத்தப்படும் ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டு, சிறப்பு ஆசிரியர்களால் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவ்வாறு பயிற்சி பெற்ற குழந்தைகள் தமது 5ஆவது வயதில் முதல் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள்.

திருநெல்வேலி பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளி மூலம், சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும், ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் 5 வயதில் உள்ள செவித்திறன் குன்றிய குழந்தைகளை சேர்த்து பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

இதில், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எப். சாந்திகுளோரி எம்ரால்ட், கேட்பியல் மற்றும் பேச்சு பயிற்சி நிபுணர் தா. அனிதா ஆரோக்கியபிரமிளா, முடநீக்கியல் வல்லுநர் ந.வி. ஜெய்கணேஷ், பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளித் தாளாளர் கே. சுதன், பிஷப் சார்ஜன்ட் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளித் தலைமையாசிரியை திலகவதி, புனித அன்னாள் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளித் தலைமையாசிரியை சபீனா, மக்கள் தொடர்பு அலுவலர் வெ. ஆறுமுகசெல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment