FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, June 14, 2016

செவித்திறன் குறைந்த குழந்தைகளை கண்டறிய பரிசோதனை மையம் திறப்பு

திருநெல்வேலி, 08 June 2016, செவித்திறன் குன்றிய மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை ஆரம்ப நிலையில் கண்டறியும் பரிசோதனை மையம் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

பிறந்த குழந்தை முதல் 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் தன்மை இருக்கிறதா இல்லையா என்பதை நவீன கருவிகள், உபகரணங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளவும், தொடர்ந்து அக்குழந்தைகளுக்கு செவித்திறன் குறைவுத் தன்மைக்கு ஏற்ப தகுந்த காதொலிக் கருவிகள் வழங்கும் வகையிலும் திருநெல்வேலியில் ரூ. 5.40 லட்சம் மதிப்பீட்டில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் துறை கட்டுப்பாட்டின் கீழ், திருநெல்வேலியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை ஆட்சியர் மு. கருணாகரன் திறந்துவைத்து, செவித்திறன் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு காதொலிக் கருவிகள் வழங்கினார். இம்மையம் காலை 11 முதல் மாலை 3 மணி வரை செயல்படும். காதொலிக் கருவிகள் பொருத்தப்பட்ட குழந்தைகள் அரசால் நடத்தப்படும் ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டு, சிறப்பு ஆசிரியர்களால் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவ்வாறு பயிற்சி பெற்ற குழந்தைகள் தமது 5ஆவது வயதில் முதல் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள்.

திருநெல்வேலி பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளி மூலம், சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும், ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் 5 வயதில் உள்ள செவித்திறன் குன்றிய குழந்தைகளை சேர்த்து பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

இதில், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எப். சாந்திகுளோரி எம்ரால்ட், கேட்பியல் மற்றும் பேச்சு பயிற்சி நிபுணர் தா. அனிதா ஆரோக்கியபிரமிளா, முடநீக்கியல் வல்லுநர் ந.வி. ஜெய்கணேஷ், பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளித் தாளாளர் கே. சுதன், பிஷப் சார்ஜன்ட் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளித் தலைமையாசிரியை திலகவதி, புனித அன்னாள் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளித் தலைமையாசிரியை சபீனா, மக்கள் தொடர்பு அலுவலர் வெ. ஆறுமுகசெல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment