FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, June 14, 2016

செவித்திறன் குறைந்த குழந்தைகளை கண்டறிய பரிசோதனை மையம் திறப்பு

திருநெல்வேலி, 08 June 2016, செவித்திறன் குன்றிய மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை ஆரம்ப நிலையில் கண்டறியும் பரிசோதனை மையம் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

பிறந்த குழந்தை முதல் 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் தன்மை இருக்கிறதா இல்லையா என்பதை நவீன கருவிகள், உபகரணங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளவும், தொடர்ந்து அக்குழந்தைகளுக்கு செவித்திறன் குறைவுத் தன்மைக்கு ஏற்ப தகுந்த காதொலிக் கருவிகள் வழங்கும் வகையிலும் திருநெல்வேலியில் ரூ. 5.40 லட்சம் மதிப்பீட்டில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் துறை கட்டுப்பாட்டின் கீழ், திருநெல்வேலியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை ஆட்சியர் மு. கருணாகரன் திறந்துவைத்து, செவித்திறன் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு காதொலிக் கருவிகள் வழங்கினார். இம்மையம் காலை 11 முதல் மாலை 3 மணி வரை செயல்படும். காதொலிக் கருவிகள் பொருத்தப்பட்ட குழந்தைகள் அரசால் நடத்தப்படும் ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டு, சிறப்பு ஆசிரியர்களால் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவ்வாறு பயிற்சி பெற்ற குழந்தைகள் தமது 5ஆவது வயதில் முதல் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள்.

திருநெல்வேலி பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளி மூலம், சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும், ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் 5 வயதில் உள்ள செவித்திறன் குன்றிய குழந்தைகளை சேர்த்து பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

இதில், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எப். சாந்திகுளோரி எம்ரால்ட், கேட்பியல் மற்றும் பேச்சு பயிற்சி நிபுணர் தா. அனிதா ஆரோக்கியபிரமிளா, முடநீக்கியல் வல்லுநர் ந.வி. ஜெய்கணேஷ், பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளித் தாளாளர் கே. சுதன், பிஷப் சார்ஜன்ட் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளித் தலைமையாசிரியை திலகவதி, புனித அன்னாள் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளித் தலைமையாசிரியை சபீனா, மக்கள் தொடர்பு அலுவலர் வெ. ஆறுமுகசெல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment