FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, June 14, 2016

செவித்திறன் குறைந்த குழந்தைகளை கண்டறிய பரிசோதனை மையம் திறப்பு

திருநெல்வேலி, 08 June 2016, செவித்திறன் குன்றிய மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை ஆரம்ப நிலையில் கண்டறியும் பரிசோதனை மையம் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

பிறந்த குழந்தை முதல் 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் தன்மை இருக்கிறதா இல்லையா என்பதை நவீன கருவிகள், உபகரணங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளவும், தொடர்ந்து அக்குழந்தைகளுக்கு செவித்திறன் குறைவுத் தன்மைக்கு ஏற்ப தகுந்த காதொலிக் கருவிகள் வழங்கும் வகையிலும் திருநெல்வேலியில் ரூ. 5.40 லட்சம் மதிப்பீட்டில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் துறை கட்டுப்பாட்டின் கீழ், திருநெல்வேலியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை ஆட்சியர் மு. கருணாகரன் திறந்துவைத்து, செவித்திறன் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு காதொலிக் கருவிகள் வழங்கினார். இம்மையம் காலை 11 முதல் மாலை 3 மணி வரை செயல்படும். காதொலிக் கருவிகள் பொருத்தப்பட்ட குழந்தைகள் அரசால் நடத்தப்படும் ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டு, சிறப்பு ஆசிரியர்களால் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவ்வாறு பயிற்சி பெற்ற குழந்தைகள் தமது 5ஆவது வயதில் முதல் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள்.

திருநெல்வேலி பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளி மூலம், சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும், ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் 5 வயதில் உள்ள செவித்திறன் குன்றிய குழந்தைகளை சேர்த்து பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

இதில், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எப். சாந்திகுளோரி எம்ரால்ட், கேட்பியல் மற்றும் பேச்சு பயிற்சி நிபுணர் தா. அனிதா ஆரோக்கியபிரமிளா, முடநீக்கியல் வல்லுநர் ந.வி. ஜெய்கணேஷ், பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளித் தாளாளர் கே. சுதன், பிஷப் சார்ஜன்ட் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளித் தலைமையாசிரியை திலகவதி, புனித அன்னாள் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளித் தலைமையாசிரியை சபீனா, மக்கள் தொடர்பு அலுவலர் வெ. ஆறுமுகசெல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment