FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, December 21, 2015

கப்பல் கட்டும் தளத்தில் 1121 பணியிடங்கள்

21.12.2015, விசாகப்பட்டினம் கப்பல்கட்டும் தளத்தில் 1121 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–

இந்திய கடற்படைக்காக கப்பல்களை தயாரிக்கவும், பழுது பார்க்கவும் உதவும் கப்பல்தளம் ஒன்று விசாகப்பட்டினத்தில் செயல்படுகிறது. தற்போது இங்கு டிரேட்ஸ்மேன் (ஸ்கில்டு) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1,121 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக என்ஜின் பிட்டர் பணிக்கு 213 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிட்டர் பணிக்கு 179 இடங்களும், பிளேட்டர் பணிக்கு 84 இடங்களும், மெஷினிஸ்ட் பணிக்கு 77 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிட்டர் பணிக்கு 58 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்...

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்ப அவகாச காலத்தின் கடைசி நாளை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

கல்வித் தகுதி:

கம்ப்யூட்டர் பிட்டர், எலக்ட்ரானிக்ஸ் பிட்டர், ரேடார் பிட்டர், ரேடியோ பிட்டர், சோனார் பிட்டர், மெஷினரி கண்ட்ரோல் பிட்டர், எலக்ட்ரிக்கல் பிட்டர், இன்ஸ்ட்ருமென்ட், என்ஜின்பிட்டர், பாய்லர் மேக்கர், ஐஸ் பிட்டர், ஜி.டி. பிட்டர், பைப்பிட்டர், ரெப்–ஏசி பிட்டர், பேட்டன் மேக்கர், பவுண்டரி, பெயிண்டர், பிளாக்ஸ்மித், பிளேட்டர், சிப்ரைட், வெல்டர், மில்ரைட் உள்ளிட்ட பிரிவில் பணிகள் உள்ளது. இந்த பிரிவுகளில் தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ் (என்.ஏ.சி.) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அதில் சுய சான்றொப்பம் செய்து புகைப்படம், சான்றிதழ் நகல்கள், கூடுதல் புகைப்படங்கள், ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் œ The Admiral Superintendent (for Manager Personnel), Naval Dockyard, Visakhapatnam14 என்ற முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் முறையில் அனுப்பப்பட வேண்டும்.

அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு டிசம்பர் 12–18 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய கூடுதல் விவரங்களை அந்த இதழில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment