FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, December 21, 2015

கப்பல் கட்டும் தளத்தில் 1121 பணியிடங்கள்

21.12.2015, விசாகப்பட்டினம் கப்பல்கட்டும் தளத்தில் 1121 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–

இந்திய கடற்படைக்காக கப்பல்களை தயாரிக்கவும், பழுது பார்க்கவும் உதவும் கப்பல்தளம் ஒன்று விசாகப்பட்டினத்தில் செயல்படுகிறது. தற்போது இங்கு டிரேட்ஸ்மேன் (ஸ்கில்டு) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1,121 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக என்ஜின் பிட்டர் பணிக்கு 213 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிட்டர் பணிக்கு 179 இடங்களும், பிளேட்டர் பணிக்கு 84 இடங்களும், மெஷினிஸ்ட் பணிக்கு 77 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிட்டர் பணிக்கு 58 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்...

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்ப அவகாச காலத்தின் கடைசி நாளை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

கல்வித் தகுதி:

கம்ப்யூட்டர் பிட்டர், எலக்ட்ரானிக்ஸ் பிட்டர், ரேடார் பிட்டர், ரேடியோ பிட்டர், சோனார் பிட்டர், மெஷினரி கண்ட்ரோல் பிட்டர், எலக்ட்ரிக்கல் பிட்டர், இன்ஸ்ட்ருமென்ட், என்ஜின்பிட்டர், பாய்லர் மேக்கர், ஐஸ் பிட்டர், ஜி.டி. பிட்டர், பைப்பிட்டர், ரெப்–ஏசி பிட்டர், பேட்டன் மேக்கர், பவுண்டரி, பெயிண்டர், பிளாக்ஸ்மித், பிளேட்டர், சிப்ரைட், வெல்டர், மில்ரைட் உள்ளிட்ட பிரிவில் பணிகள் உள்ளது. இந்த பிரிவுகளில் தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ் (என்.ஏ.சி.) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அதில் சுய சான்றொப்பம் செய்து புகைப்படம், சான்றிதழ் நகல்கள், கூடுதல் புகைப்படங்கள், ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் œ The Admiral Superintendent (for Manager Personnel), Naval Dockyard, Visakhapatnam14 என்ற முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் முறையில் அனுப்பப்பட வேண்டும்.

அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு டிசம்பர் 12–18 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய கூடுதல் விவரங்களை அந்த இதழில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment