FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, December 12, 2015

கணினிப் பயிற்சி பெற்ற பார்வையற்றோருக்கு சான்றிதழ்

திருச்சி, 11 December 2015,
பார்வையற்றோருக்கு அடிப்படைக் கணினிப் பயிற்சியை திரைவாசிப்பான் மூலம் அளித்து, அவர்களுக்கான பயிற்சிச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

இப்பல்கலைக்கழகத்தின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையும், பார்வையற்றோருக்கான தேசிய கூட்டமைப்பும் இணைந்து இப்பயிற்சியை கடந்த ஒருமாதமாக திருச்சி காஜாமலை வளாகத்தில் நடத்தின. இதுபோன்ற பயிற்சி சென்னை, மதுரை, கோவை நகரங்களிலும் நடத்தப்பட்டது.

பயிற்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழா பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் சி. திருச்செல்வம் தலைமை வகித்து, பயிற்சி பெற்ற 15 பேருக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

பயிற்சி அளித்தது எப்படி: பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் பார்வையற்றவர்கள் என்பதால், அவர்களுக்கு திரைவாசிப்பான் வசதி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பார்வையற்றோர் கணினியில் அடிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஒலியாக கிடைக்கும் என்பதால் பயிற்சி பெறுபவர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் பயிற்சி பெற்றனர்.

இதன் மூலம் அவர்கள் கணினி சார்ந்த அனைத்து திறன்களையும் பெற்றுள்ளனர் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாற்றுத்திறனாளிகள்

நலத் துறையின் தலைவர் முனைவர் எம். பிரபாவதி.

No comments:

Post a Comment