FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, December 12, 2015

கணினிப் பயிற்சி பெற்ற பார்வையற்றோருக்கு சான்றிதழ்

திருச்சி, 11 December 2015,
பார்வையற்றோருக்கு அடிப்படைக் கணினிப் பயிற்சியை திரைவாசிப்பான் மூலம் அளித்து, அவர்களுக்கான பயிற்சிச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

இப்பல்கலைக்கழகத்தின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையும், பார்வையற்றோருக்கான தேசிய கூட்டமைப்பும் இணைந்து இப்பயிற்சியை கடந்த ஒருமாதமாக திருச்சி காஜாமலை வளாகத்தில் நடத்தின. இதுபோன்ற பயிற்சி சென்னை, மதுரை, கோவை நகரங்களிலும் நடத்தப்பட்டது.

பயிற்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழா பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் சி. திருச்செல்வம் தலைமை வகித்து, பயிற்சி பெற்ற 15 பேருக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

பயிற்சி அளித்தது எப்படி: பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் பார்வையற்றவர்கள் என்பதால், அவர்களுக்கு திரைவாசிப்பான் வசதி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பார்வையற்றோர் கணினியில் அடிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஒலியாக கிடைக்கும் என்பதால் பயிற்சி பெறுபவர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் பயிற்சி பெற்றனர்.

இதன் மூலம் அவர்கள் கணினி சார்ந்த அனைத்து திறன்களையும் பெற்றுள்ளனர் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாற்றுத்திறனாளிகள்

நலத் துறையின் தலைவர் முனைவர் எம். பிரபாவதி.

No comments:

Post a Comment