FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, December 12, 2015

கணினிப் பயிற்சி பெற்ற பார்வையற்றோருக்கு சான்றிதழ்

திருச்சி, 11 December 2015,
பார்வையற்றோருக்கு அடிப்படைக் கணினிப் பயிற்சியை திரைவாசிப்பான் மூலம் அளித்து, அவர்களுக்கான பயிற்சிச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

இப்பல்கலைக்கழகத்தின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையும், பார்வையற்றோருக்கான தேசிய கூட்டமைப்பும் இணைந்து இப்பயிற்சியை கடந்த ஒருமாதமாக திருச்சி காஜாமலை வளாகத்தில் நடத்தின. இதுபோன்ற பயிற்சி சென்னை, மதுரை, கோவை நகரங்களிலும் நடத்தப்பட்டது.

பயிற்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழா பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் சி. திருச்செல்வம் தலைமை வகித்து, பயிற்சி பெற்ற 15 பேருக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

பயிற்சி அளித்தது எப்படி: பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் பார்வையற்றவர்கள் என்பதால், அவர்களுக்கு திரைவாசிப்பான் வசதி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பார்வையற்றோர் கணினியில் அடிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஒலியாக கிடைக்கும் என்பதால் பயிற்சி பெறுபவர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் பயிற்சி பெற்றனர்.

இதன் மூலம் அவர்கள் கணினி சார்ந்த அனைத்து திறன்களையும் பெற்றுள்ளனர் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாற்றுத்திறனாளிகள்

நலத் துறையின் தலைவர் முனைவர் எம். பிரபாவதி.

No comments:

Post a Comment