FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, December 3, 2015

போராட்டமாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை: இன்று (டிசம்பர் 3) மாற்றுத் திறனாளிகள் தினம்

3.12.2015, இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி, வாய்ப்புகள் பிற நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மாற்றுத் திறனாளிகள் என உலக சுகாதார நிறுவன ஆய்வுகள் தெரி விக்கின்றன. இந்தியாவில் 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி 121 கோடி மக்களில் 2.21 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 2.3 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகள். அவர் களுக்காக, மத்திய அரசு உதவியு டன் தமிழக அரசு 60-க்கும் மேற் பட்ட நலத்திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறது.

எனினும், இத்தகைய திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளைச் சென்ற டைவது சிக்கலாகவே உள்ளது. இதுகுறித்து காந்திகிராமம் கிராமி யப் பல்கலைக்கழக மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு மைய இயக்குநரும், பேராசிரியருமான எம்.பி. போரையன் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க் கையும், வளர்ச்சியும் இன்றளவும் போராட்டமாகவே இருந்து வருகி றது. அரசு வழங்கும் சலுகைகள், பல்வேறு உதவிகள் கணிசமான மாற்றுத் திறனாளிகளை சென்ற டையவில்லை. அரசின் நலத்திட்டங் கள் குறித்த விழிப்புணர்வும் குறைவாக உள்ளது. அறிந்திட வாய்ப்பிருந்தாலும் சலுகைகள், உதவிகள் பெறுவது குதிரைக்கொம் பாகவே உள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் பார்வையிழந்த குழந்தைகள், வளரி ளம் பெண்கள் உள்ளிட்டோரை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற் றோரால் வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் இவர்களின் வருவாய் பாதிக்கப்பட்டு, அக்குழந் தைகளுக்கு போதுமான சத்துள்ள உணவுகளை வழங்க முடிய வில்லை. இதைப் போன்ற குடும் பங்கள் மீது அரசு தனிக்கவனம் செலுத்தி உதவி செய்ய வேண்டும்.

வயதான பெற்றோரின் பராமரிப் பில் நடமாட்டமின்றி உள்ள பல மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை, பெற்றோர்களின் மறைவுக்குப்பின் கேள்விக்குறியாகி விடுகிறது. இது போன்ற மாற்றுத் திறனாளிகளை அரசோ, தொண்டு நிறுவனங் களோ கடைசிவரை பராமரிக்க உத்தரவாதம் அளிக்கவேண்டும். ஆண், பெண் மாற்றுத் திறனாளிக ளுக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பது, அவர்களை பாதிக்கும் மற்றொரு பிரச்சினை. அரசே சுயம்வரங்களை நடத்தி மாற்றுத் திறனாளிகளின் மணவாழ்க்கை மலர்ந்திட உதவலாம். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் உண் மையான மறுமலர்ச்சியை ஏற்படுத் துவது நம் அனைவரின் கடமை யாகும் என்று அவர் கூறினார்.

‘மாணவராக இருந்தபோது, இரண்டு கால்களையும் இழந்த ஒருவரை பார்த்தபோதுதான், புதிய காலணிகளுக்காக அடம்பிடித்து அழுவதை நிறுத்தினேன்’ என்று புகழ்பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் தெரி வித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், ‘மாற்றுத் திறனாளி களுக்கு, தான் தயாரித்த எடை குறைந்த செயற்கை அவயத்தைத் தான் எனது மிகச்சிறந்த பங்களிப் பாக கருதுகிறேன்’ என்று குறிப் பிட்டார். இதைப்போல, ஒவ்வொரு வரின் மனதிலும் மாற்றத்தை ஏற் படுத்துவதுதான் மூலம் மட்டுமே, மாற்றுத் திறனாளிகளுக்கான உண்மையான சமூக பாதுகாப்பை உருவாக்க முடியும்.

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் அதிகம்

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 16.42 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இதில் 48.2 சதவீதம் ஆண்கள், 51.8 சதவீதம் பெண்கள். கிராமப் பகுதிகளில் 57.5 சதவீதம் பேரும், மீதமுள்ள 42.5 சதவீதம் பேர் நகர்புறங்களிலும் வசிக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளில், தமிழகத்தில் மட்டுமே, ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment