FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, December 3, 2015

போராட்டமாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை: இன்று (டிசம்பர் 3) மாற்றுத் திறனாளிகள் தினம்

3.12.2015, இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி, வாய்ப்புகள் பிற நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மாற்றுத் திறனாளிகள் என உலக சுகாதார நிறுவன ஆய்வுகள் தெரி விக்கின்றன. இந்தியாவில் 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி 121 கோடி மக்களில் 2.21 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 2.3 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகள். அவர் களுக்காக, மத்திய அரசு உதவியு டன் தமிழக அரசு 60-க்கும் மேற் பட்ட நலத்திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறது.

எனினும், இத்தகைய திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளைச் சென்ற டைவது சிக்கலாகவே உள்ளது. இதுகுறித்து காந்திகிராமம் கிராமி யப் பல்கலைக்கழக மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு மைய இயக்குநரும், பேராசிரியருமான எம்.பி. போரையன் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க் கையும், வளர்ச்சியும் இன்றளவும் போராட்டமாகவே இருந்து வருகி றது. அரசு வழங்கும் சலுகைகள், பல்வேறு உதவிகள் கணிசமான மாற்றுத் திறனாளிகளை சென்ற டையவில்லை. அரசின் நலத்திட்டங் கள் குறித்த விழிப்புணர்வும் குறைவாக உள்ளது. அறிந்திட வாய்ப்பிருந்தாலும் சலுகைகள், உதவிகள் பெறுவது குதிரைக்கொம் பாகவே உள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் பார்வையிழந்த குழந்தைகள், வளரி ளம் பெண்கள் உள்ளிட்டோரை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற் றோரால் வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் இவர்களின் வருவாய் பாதிக்கப்பட்டு, அக்குழந் தைகளுக்கு போதுமான சத்துள்ள உணவுகளை வழங்க முடிய வில்லை. இதைப் போன்ற குடும் பங்கள் மீது அரசு தனிக்கவனம் செலுத்தி உதவி செய்ய வேண்டும்.

வயதான பெற்றோரின் பராமரிப் பில் நடமாட்டமின்றி உள்ள பல மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை, பெற்றோர்களின் மறைவுக்குப்பின் கேள்விக்குறியாகி விடுகிறது. இது போன்ற மாற்றுத் திறனாளிகளை அரசோ, தொண்டு நிறுவனங் களோ கடைசிவரை பராமரிக்க உத்தரவாதம் அளிக்கவேண்டும். ஆண், பெண் மாற்றுத் திறனாளிக ளுக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பது, அவர்களை பாதிக்கும் மற்றொரு பிரச்சினை. அரசே சுயம்வரங்களை நடத்தி மாற்றுத் திறனாளிகளின் மணவாழ்க்கை மலர்ந்திட உதவலாம். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் உண் மையான மறுமலர்ச்சியை ஏற்படுத் துவது நம் அனைவரின் கடமை யாகும் என்று அவர் கூறினார்.

‘மாணவராக இருந்தபோது, இரண்டு கால்களையும் இழந்த ஒருவரை பார்த்தபோதுதான், புதிய காலணிகளுக்காக அடம்பிடித்து அழுவதை நிறுத்தினேன்’ என்று புகழ்பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் தெரி வித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், ‘மாற்றுத் திறனாளி களுக்கு, தான் தயாரித்த எடை குறைந்த செயற்கை அவயத்தைத் தான் எனது மிகச்சிறந்த பங்களிப் பாக கருதுகிறேன்’ என்று குறிப் பிட்டார். இதைப்போல, ஒவ்வொரு வரின் மனதிலும் மாற்றத்தை ஏற் படுத்துவதுதான் மூலம் மட்டுமே, மாற்றுத் திறனாளிகளுக்கான உண்மையான சமூக பாதுகாப்பை உருவாக்க முடியும்.

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் அதிகம்

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 16.42 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இதில் 48.2 சதவீதம் ஆண்கள், 51.8 சதவீதம் பெண்கள். கிராமப் பகுதிகளில் 57.5 சதவீதம் பேரும், மீதமுள்ள 42.5 சதவீதம் பேர் நகர்புறங்களிலும் வசிக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளில், தமிழகத்தில் மட்டுமே, ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment