FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, December 22, 2015

மாற்றுத் திறனாளிகள் நூதனப் போராட்டம்

கடலூர், 22 December 2015
மாற்றுத் திறனாளிகள் கடலூரில் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை, கடந்த ஓராண்டாக வழங்காததை உடனடியாக வழங்க வேண்டும்.

ஊனத்துக்காக வழங்கப்படும் உதவித்தொகையை காரணம் காட்டி, கல்வி உதவித்தொகை மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தினர் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமை தாங்கினார்.

செயலர் பொன்.சண்முகம் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, பாலமுருகன், இலக்கியா உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடமும் மனு அளித்தனர்.

No comments:

Post a Comment