FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, December 24, 2015

ஐ.ஏ.எஸ்., படிக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: சகாயம்

23.12.2015, மதுரை :
''இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியத்துவம் குறைந்திருந்தாலும், மக்கள் மத்தியில் மதிப்பு இருக்கிறது'' என, சென்னை அறிவியல் நகர துணைத் தலைவர் சகாயம் பேசினார்.மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டட திறப்பு விழா நடந்தது. முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.மையத்தை திறந்து வைத்து சகாயம் பேசியதாவது: ஐ.ஏ.எஸ்., படிக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதனால்தான் நாமக்கல் கலெக்டராக நான் இருந்த போது ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன். உடல் குறையோடு, வலியுடன் வாழ்ந்து வரும் மாற்றுத் திறனாளிகளை, அதிகாரத்தின் உச்சத்தில் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியத்துவம் குறைந்திருந்தாலும், மக்கள் மத்தியில் மதிப்பு இருக்கிறது. எனவே, மாற்றுத் திறனாளிகள் தடைகற்களையும், படிக்கற்களாக்கி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு படிக்க வேண்டும், என்றார்.பயிற்சி மைய இயக்குனர் ராமகிருஷ்ணன், துணை முதல்வர் ஆபிரகாம், ஒருங்கிணைப்பாளர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹெலன் ரத்தின மோனிகா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment