FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, December 24, 2015

ஐ.ஏ.எஸ்., படிக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: சகாயம்

23.12.2015, மதுரை :
''இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியத்துவம் குறைந்திருந்தாலும், மக்கள் மத்தியில் மதிப்பு இருக்கிறது'' என, சென்னை அறிவியல் நகர துணைத் தலைவர் சகாயம் பேசினார்.மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டட திறப்பு விழா நடந்தது. முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.மையத்தை திறந்து வைத்து சகாயம் பேசியதாவது: ஐ.ஏ.எஸ்., படிக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதனால்தான் நாமக்கல் கலெக்டராக நான் இருந்த போது ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன். உடல் குறையோடு, வலியுடன் வாழ்ந்து வரும் மாற்றுத் திறனாளிகளை, அதிகாரத்தின் உச்சத்தில் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியத்துவம் குறைந்திருந்தாலும், மக்கள் மத்தியில் மதிப்பு இருக்கிறது. எனவே, மாற்றுத் திறனாளிகள் தடைகற்களையும், படிக்கற்களாக்கி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு படிக்க வேண்டும், என்றார்.பயிற்சி மைய இயக்குனர் ராமகிருஷ்ணன், துணை முதல்வர் ஆபிரகாம், ஒருங்கிணைப்பாளர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹெலன் ரத்தின மோனிகா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment