FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, December 24, 2015

ஐ.ஏ.எஸ்., படிக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: சகாயம்

23.12.2015, மதுரை :
''இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியத்துவம் குறைந்திருந்தாலும், மக்கள் மத்தியில் மதிப்பு இருக்கிறது'' என, சென்னை அறிவியல் நகர துணைத் தலைவர் சகாயம் பேசினார்.மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டட திறப்பு விழா நடந்தது. முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.மையத்தை திறந்து வைத்து சகாயம் பேசியதாவது: ஐ.ஏ.எஸ்., படிக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதனால்தான் நாமக்கல் கலெக்டராக நான் இருந்த போது ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன். உடல் குறையோடு, வலியுடன் வாழ்ந்து வரும் மாற்றுத் திறனாளிகளை, அதிகாரத்தின் உச்சத்தில் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியத்துவம் குறைந்திருந்தாலும், மக்கள் மத்தியில் மதிப்பு இருக்கிறது. எனவே, மாற்றுத் திறனாளிகள் தடைகற்களையும், படிக்கற்களாக்கி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு படிக்க வேண்டும், என்றார்.பயிற்சி மைய இயக்குனர் ராமகிருஷ்ணன், துணை முதல்வர் ஆபிரகாம், ஒருங்கிணைப்பாளர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹெலன் ரத்தின மோனிகா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment