FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, December 24, 2015

ஐ.ஏ.எஸ்., படிக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: சகாயம்

23.12.2015, மதுரை :
''இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியத்துவம் குறைந்திருந்தாலும், மக்கள் மத்தியில் மதிப்பு இருக்கிறது'' என, சென்னை அறிவியல் நகர துணைத் தலைவர் சகாயம் பேசினார்.மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டட திறப்பு விழா நடந்தது. முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.மையத்தை திறந்து வைத்து சகாயம் பேசியதாவது: ஐ.ஏ.எஸ்., படிக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதனால்தான் நாமக்கல் கலெக்டராக நான் இருந்த போது ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன். உடல் குறையோடு, வலியுடன் வாழ்ந்து வரும் மாற்றுத் திறனாளிகளை, அதிகாரத்தின் உச்சத்தில் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியத்துவம் குறைந்திருந்தாலும், மக்கள் மத்தியில் மதிப்பு இருக்கிறது. எனவே, மாற்றுத் திறனாளிகள் தடைகற்களையும், படிக்கற்களாக்கி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு படிக்க வேண்டும், என்றார்.பயிற்சி மைய இயக்குனர் ராமகிருஷ்ணன், துணை முதல்வர் ஆபிரகாம், ஒருங்கிணைப்பாளர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹெலன் ரத்தின மோனிகா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment