FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, December 4, 2015

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, 04 December 2015,
உலக கணினி கல்வி தினம், மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, அரசு காது கேளாதோர் பள்ளியில் இலவச கணினி பயிற்சி, ஓவியப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுகை மகாராணி ரோட்டரி சங்கம், சுபலெக்ஸ் கலை வளர்ச்சி மையம், யுஎஸ். நெட்ஒர்க் இணைந்து நடத்திய முகாமுக்கு சங்கத் தலைவர் என். லட்சுமி தலைமை வகித்தார். முகாமை கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ். கருணாகரன் தொடங்கிவைத்தார்.

,பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் க. மோகன்ராஜ், கணினி பயிற்றுநர் ஏ. உதயக்குமார், ஓவியப் பயிற்றுநர் ஆ. ராஜப்பா, ஆ. அய்யப்பா, நிர்வாகிகள் ராணி கனகராஜன், குப்பாள் நாகப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், 50 மாணவர்கள் பங்கேற்றனர். வாரம் ஒருநாள் ஓவியப் பயிற்சி, வாரம் 2 நாள் கணினிப் பயிற்சி அளிக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். செயலர் தி. கலைச்செல்வி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment