FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, December 4, 2015

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, 04 December 2015,
உலக கணினி கல்வி தினம், மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, அரசு காது கேளாதோர் பள்ளியில் இலவச கணினி பயிற்சி, ஓவியப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுகை மகாராணி ரோட்டரி சங்கம், சுபலெக்ஸ் கலை வளர்ச்சி மையம், யுஎஸ். நெட்ஒர்க் இணைந்து நடத்திய முகாமுக்கு சங்கத் தலைவர் என். லட்சுமி தலைமை வகித்தார். முகாமை கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ். கருணாகரன் தொடங்கிவைத்தார்.

,பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் க. மோகன்ராஜ், கணினி பயிற்றுநர் ஏ. உதயக்குமார், ஓவியப் பயிற்றுநர் ஆ. ராஜப்பா, ஆ. அய்யப்பா, நிர்வாகிகள் ராணி கனகராஜன், குப்பாள் நாகப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், 50 மாணவர்கள் பங்கேற்றனர். வாரம் ஒருநாள் ஓவியப் பயிற்சி, வாரம் 2 நாள் கணினிப் பயிற்சி அளிக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். செயலர் தி. கலைச்செல்வி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment