FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, December 12, 2015

ஆவின் பாலகம் நடத்த அனுமதி கோரி மாற்றுத் திறனாளி தம்பதி போராட்டம்

கோவை,11 December 2015
ஆவின் பாலகம் நடத்த அனுமதி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளி தம்பதி ஆர்.எஸ்.புரம் ஆவின் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (34). மாற்றுத் திறனாளி. இவரது மனைவி சந்தியா. இவரும் மாற்றுத் திறனாளியாவார். மாரியப்பன் ரெயின்போ பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் ஒயர் கூடை, நாற்காலிகளுக்கு ஒயர் பின்னும் வேலை செய்து வந்தார்.

சாலையோரக் கடைகளை அகற்றும்போது வேலை வாய்ப்பை இழந்த மாரியப்பன், ஆவின் பாலகம் நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவரது மனுவை ஆவின் அதிகாரிகள் ஏற்கவில்லையாம். இதனால் மனமுடைந்த மாரியப்பன், அவரது சந்தியா, மகன் ரியாந்த் ஆகியோருடன் ஆவின் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, ஆவின் தலைவர் டி.தாமோதரன், பொது மேலாளர் கே.சுமதி ஆகியோர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மாநகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறையினரின் அனுமதியைப் பெற்று வந்தால் அவரது மனுவை பரிசீலிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, மாரியப்பன் தம்பதி போராட்டத்தைக் கைவிட்டனர்.

No comments:

Post a Comment