FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, December 12, 2015

ஆவின் பாலகம் நடத்த அனுமதி கோரி மாற்றுத் திறனாளி தம்பதி போராட்டம்

கோவை,11 December 2015
ஆவின் பாலகம் நடத்த அனுமதி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளி தம்பதி ஆர்.எஸ்.புரம் ஆவின் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (34). மாற்றுத் திறனாளி. இவரது மனைவி சந்தியா. இவரும் மாற்றுத் திறனாளியாவார். மாரியப்பன் ரெயின்போ பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் ஒயர் கூடை, நாற்காலிகளுக்கு ஒயர் பின்னும் வேலை செய்து வந்தார்.

சாலையோரக் கடைகளை அகற்றும்போது வேலை வாய்ப்பை இழந்த மாரியப்பன், ஆவின் பாலகம் நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவரது மனுவை ஆவின் அதிகாரிகள் ஏற்கவில்லையாம். இதனால் மனமுடைந்த மாரியப்பன், அவரது சந்தியா, மகன் ரியாந்த் ஆகியோருடன் ஆவின் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, ஆவின் தலைவர் டி.தாமோதரன், பொது மேலாளர் கே.சுமதி ஆகியோர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மாநகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறையினரின் அனுமதியைப் பெற்று வந்தால் அவரது மனுவை பரிசீலிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, மாரியப்பன் தம்பதி போராட்டத்தைக் கைவிட்டனர்.

No comments:

Post a Comment