FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, December 12, 2015

ஆவின் பாலகம் நடத்த அனுமதி கோரி மாற்றுத் திறனாளி தம்பதி போராட்டம்

கோவை,11 December 2015
ஆவின் பாலகம் நடத்த அனுமதி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளி தம்பதி ஆர்.எஸ்.புரம் ஆவின் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (34). மாற்றுத் திறனாளி. இவரது மனைவி சந்தியா. இவரும் மாற்றுத் திறனாளியாவார். மாரியப்பன் ரெயின்போ பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் ஒயர் கூடை, நாற்காலிகளுக்கு ஒயர் பின்னும் வேலை செய்து வந்தார்.

சாலையோரக் கடைகளை அகற்றும்போது வேலை வாய்ப்பை இழந்த மாரியப்பன், ஆவின் பாலகம் நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவரது மனுவை ஆவின் அதிகாரிகள் ஏற்கவில்லையாம். இதனால் மனமுடைந்த மாரியப்பன், அவரது சந்தியா, மகன் ரியாந்த் ஆகியோருடன் ஆவின் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, ஆவின் தலைவர் டி.தாமோதரன், பொது மேலாளர் கே.சுமதி ஆகியோர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மாநகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறையினரின் அனுமதியைப் பெற்று வந்தால் அவரது மனுவை பரிசீலிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, மாரியப்பன் தம்பதி போராட்டத்தைக் கைவிட்டனர்.

No comments:

Post a Comment