FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, December 18, 2015

மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன்: தவாக வலியுறுத்தல்

நெய்வேலி, 17 December 2015
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களையும், அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடனும் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:

மழை வெள்ளத்தால் மாற்றுத் திறனாளிகளின் உபகரணங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், அவர்களின் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் துயரைத் துடைக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் உபகரணங்களையும், அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடனையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுகளை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசே வீடு கட்டித்தர வேண்டும்.

இவர்களுக்கான நிவாரணத் தொகை மற்றும் உபகரணங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment