FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, December 18, 2015

மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன்: தவாக வலியுறுத்தல்

நெய்வேலி, 17 December 2015
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களையும், அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடனும் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:

மழை வெள்ளத்தால் மாற்றுத் திறனாளிகளின் உபகரணங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், அவர்களின் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் துயரைத் துடைக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் உபகரணங்களையும், அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடனையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுகளை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசே வீடு கட்டித்தர வேண்டும்.

இவர்களுக்கான நிவாரணத் தொகை மற்றும் உபகரணங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment