FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, December 18, 2015

மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன்: தவாக வலியுறுத்தல்

நெய்வேலி, 17 December 2015
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களையும், அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடனும் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:

மழை வெள்ளத்தால் மாற்றுத் திறனாளிகளின் உபகரணங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், அவர்களின் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் துயரைத் துடைக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் உபகரணங்களையும், அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடனையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுகளை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசே வீடு கட்டித்தர வேண்டும்.

இவர்களுக்கான நிவாரணத் தொகை மற்றும் உபகரணங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment