FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, December 15, 2015

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலமும்

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலமும், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் திங்கள்கிழமை இடம் பெற்றது.

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் மாற்றுத்திறனாளிகளும், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களதும் பங்களிப்புடன் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு பாசிக்குடா பிரதான வீதியூடாக வாழைச்சேனை துறைமுக சந்தி வரை சென்றதுடன் மாற்றுத் திறனாளிகளது கலை நிகழ்ச்சிகளும் பரிசில் வழங்கும் நிகழ்வும் பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.

மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலக பிரிவில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் அதிதிகள் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகமும், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பும் இணைந்து நாடாத்திய இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் எஸ்.பரமானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.நஸீம், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment