FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, December 15, 2015

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலமும்

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலமும், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் திங்கள்கிழமை இடம் பெற்றது.

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் மாற்றுத்திறனாளிகளும், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களதும் பங்களிப்புடன் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு பாசிக்குடா பிரதான வீதியூடாக வாழைச்சேனை துறைமுக சந்தி வரை சென்றதுடன் மாற்றுத் திறனாளிகளது கலை நிகழ்ச்சிகளும் பரிசில் வழங்கும் நிகழ்வும் பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.

மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலக பிரிவில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் அதிதிகள் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகமும், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பும் இணைந்து நாடாத்திய இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் எஸ்.பரமானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.நஸீம், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment