FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, December 15, 2015

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலமும்

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலமும், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் திங்கள்கிழமை இடம் பெற்றது.

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் மாற்றுத்திறனாளிகளும், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களதும் பங்களிப்புடன் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு பாசிக்குடா பிரதான வீதியூடாக வாழைச்சேனை துறைமுக சந்தி வரை சென்றதுடன் மாற்றுத் திறனாளிகளது கலை நிகழ்ச்சிகளும் பரிசில் வழங்கும் நிகழ்வும் பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.

மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலக பிரிவில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் அதிதிகள் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகமும், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பும் இணைந்து நாடாத்திய இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் எஸ்.பரமானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.நஸீம், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment