FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, December 15, 2015

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலமும்

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலமும், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் திங்கள்கிழமை இடம் பெற்றது.

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் மாற்றுத்திறனாளிகளும், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களதும் பங்களிப்புடன் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு பாசிக்குடா பிரதான வீதியூடாக வாழைச்சேனை துறைமுக சந்தி வரை சென்றதுடன் மாற்றுத் திறனாளிகளது கலை நிகழ்ச்சிகளும் பரிசில் வழங்கும் நிகழ்வும் பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.

மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலக பிரிவில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் அதிதிகள் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகமும், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பும் இணைந்து நாடாத்திய இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் எஸ்.பரமானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.நஸீம், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment