FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, December 21, 2015

உண்டியலில் பணம் திருடிய DEAF சிறுவன்: சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்ப்பு

21.12.2015, திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, கோவில் உண்டியலில் பணம் திருடிய சிறுவன், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

போளூர் அருகே, அருந்ததிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின், 16 வயது மகன், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. வேலூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள அரசு காதுகேளாதோர் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்து, பின் மீண்டும் திங்கட்கிழமை பள்ளிக்கு செல்வது வழக்கம். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் காலை, புதுப்பாளையம் கூட்ரோட்டில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோவிலில் பூட்டை உடைத்து, உள்ளே இருந்து, 500 ரூபாயை திருடினார். பின் காங்கேயனூர் மலை மீது உள்ள முருகன் கோவிலில் பணத்தை திருட முயன்றபோது, பொதுமக்கள் மடக்கி பிடித்து கலசப்பாக்கம் போலீசில் அவரை ஒப்படைத்தனர். பிடிபட்ட சிறுவன் வாய் பேச முடியாதவர் என்பதால், திருவண்ணாமலை ரங்கம்மாள் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியின் சிறப்பு ஆசிரியர் சங்கர் வரவழைக்கப்பட்டு, அவர் உதவியுடன் சிறுவனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அவரிடம் இருந்து, ரேணுகாம்பாள் கோவில் உண்டியலில் திருடப்பட்ட, 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின் கலசப்பாக்கம் போலீசார் சிறுவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்

No comments:

Post a Comment