FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, December 21, 2015

உண்டியலில் பணம் திருடிய DEAF சிறுவன்: சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்ப்பு

21.12.2015, திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, கோவில் உண்டியலில் பணம் திருடிய சிறுவன், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

போளூர் அருகே, அருந்ததிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின், 16 வயது மகன், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. வேலூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள அரசு காதுகேளாதோர் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்து, பின் மீண்டும் திங்கட்கிழமை பள்ளிக்கு செல்வது வழக்கம். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் காலை, புதுப்பாளையம் கூட்ரோட்டில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோவிலில் பூட்டை உடைத்து, உள்ளே இருந்து, 500 ரூபாயை திருடினார். பின் காங்கேயனூர் மலை மீது உள்ள முருகன் கோவிலில் பணத்தை திருட முயன்றபோது, பொதுமக்கள் மடக்கி பிடித்து கலசப்பாக்கம் போலீசில் அவரை ஒப்படைத்தனர். பிடிபட்ட சிறுவன் வாய் பேச முடியாதவர் என்பதால், திருவண்ணாமலை ரங்கம்மாள் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியின் சிறப்பு ஆசிரியர் சங்கர் வரவழைக்கப்பட்டு, அவர் உதவியுடன் சிறுவனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அவரிடம் இருந்து, ரேணுகாம்பாள் கோவில் உண்டியலில் திருடப்பட்ட, 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின் கலசப்பாக்கம் போலீசார் சிறுவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்

No comments:

Post a Comment