FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, December 21, 2015

உண்டியலில் பணம் திருடிய DEAF சிறுவன்: சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்ப்பு

21.12.2015, திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, கோவில் உண்டியலில் பணம் திருடிய சிறுவன், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

போளூர் அருகே, அருந்ததிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின், 16 வயது மகன், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. வேலூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள அரசு காதுகேளாதோர் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்து, பின் மீண்டும் திங்கட்கிழமை பள்ளிக்கு செல்வது வழக்கம். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் காலை, புதுப்பாளையம் கூட்ரோட்டில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோவிலில் பூட்டை உடைத்து, உள்ளே இருந்து, 500 ரூபாயை திருடினார். பின் காங்கேயனூர் மலை மீது உள்ள முருகன் கோவிலில் பணத்தை திருட முயன்றபோது, பொதுமக்கள் மடக்கி பிடித்து கலசப்பாக்கம் போலீசில் அவரை ஒப்படைத்தனர். பிடிபட்ட சிறுவன் வாய் பேச முடியாதவர் என்பதால், திருவண்ணாமலை ரங்கம்மாள் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியின் சிறப்பு ஆசிரியர் சங்கர் வரவழைக்கப்பட்டு, அவர் உதவியுடன் சிறுவனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அவரிடம் இருந்து, ரேணுகாம்பாள் கோவில் உண்டியலில் திருடப்பட்ட, 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின் கலசப்பாக்கம் போலீசார் சிறுவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்

No comments:

Post a Comment