FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, December 21, 2015

உண்டியலில் பணம் திருடிய DEAF சிறுவன்: சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்ப்பு

21.12.2015, திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, கோவில் உண்டியலில் பணம் திருடிய சிறுவன், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

போளூர் அருகே, அருந்ததிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின், 16 வயது மகன், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. வேலூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள அரசு காதுகேளாதோர் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்து, பின் மீண்டும் திங்கட்கிழமை பள்ளிக்கு செல்வது வழக்கம். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் காலை, புதுப்பாளையம் கூட்ரோட்டில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோவிலில் பூட்டை உடைத்து, உள்ளே இருந்து, 500 ரூபாயை திருடினார். பின் காங்கேயனூர் மலை மீது உள்ள முருகன் கோவிலில் பணத்தை திருட முயன்றபோது, பொதுமக்கள் மடக்கி பிடித்து கலசப்பாக்கம் போலீசில் அவரை ஒப்படைத்தனர். பிடிபட்ட சிறுவன் வாய் பேச முடியாதவர் என்பதால், திருவண்ணாமலை ரங்கம்மாள் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியின் சிறப்பு ஆசிரியர் சங்கர் வரவழைக்கப்பட்டு, அவர் உதவியுடன் சிறுவனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அவரிடம் இருந்து, ரேணுகாம்பாள் கோவில் உண்டியலில் திருடப்பட்ட, 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின் கலசப்பாக்கம் போலீசார் சிறுவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்

No comments:

Post a Comment