FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, December 25, 2015

புதிய தொழில்முனைவோருக்கு மானியத்துடன் வங்கிக் கடனுதவி: ராமநாதபுரம் ஆட்சியர் தகவல்

ராமநாதபுரம், 24 December 2015
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற புதிய தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற பட்டம், பட்டயப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்த, தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நீட்ஸ் என்ற இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் துவங்க குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிக பட்சம் ரூ. ஒரு கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு வங்கிக் கடன் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால் 35 வயதுக்கு மிகாமலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின,பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினராக இருந்தால் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். வருமான வரம்பு ஏதுமில்லை. 3 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம் அல்லது அதிக பட்சமாக ரூ. 25 லட்சம் மானியமும், 3 சதவிகிதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

தனிநபர், புதிய தொழில் முனைவோர், பங்குதாரர் நிறுவனங்களும், இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். நடப்பு நிதியாண்டிற்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 19 நபர்களுக்கு ரூ.190 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தொழில் தொடங்க விருப்பம் உள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04567-230497 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம். இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment