FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, December 25, 2015

புதிய தொழில்முனைவோருக்கு மானியத்துடன் வங்கிக் கடனுதவி: ராமநாதபுரம் ஆட்சியர் தகவல்

ராமநாதபுரம், 24 December 2015
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற புதிய தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற பட்டம், பட்டயப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்த, தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நீட்ஸ் என்ற இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் துவங்க குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிக பட்சம் ரூ. ஒரு கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு வங்கிக் கடன் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால் 35 வயதுக்கு மிகாமலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின,பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினராக இருந்தால் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். வருமான வரம்பு ஏதுமில்லை. 3 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம் அல்லது அதிக பட்சமாக ரூ. 25 லட்சம் மானியமும், 3 சதவிகிதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

தனிநபர், புதிய தொழில் முனைவோர், பங்குதாரர் நிறுவனங்களும், இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். நடப்பு நிதியாண்டிற்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 19 நபர்களுக்கு ரூ.190 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தொழில் தொடங்க விருப்பம் உள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04567-230497 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம். இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment