FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, December 7, 2015

நெல்லை மாவட்டத்தில் 49,999 பேருக்கு தேசிய மாற்றுத் திறனாளி அட்டை: ஆட்சியர்

05.12.2015, திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 49,999 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா, வண்ணார்பேட்டையில் உள்ள எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் மாற்றுத் திறனாளிகள் செயல்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.500 வழங்கி வந்ததை தமிழக முதல்வர் ஜெயலிலதா ரூ. 1,000 ஆக உயர்த்தியுள்ளார். இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய்த் துறை மூலம் 16 ஆயிரம் பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை தவிர 49,999 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளில் 3 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறு. தனியார் துறைகளிலும் இத்தகைய ஒதுக்கீட்டை உறுதி செய்து வருகிறது. இந்த வாய்ப்புகளை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இந்த விழாவில், சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் 10 பேருக்கு ரூ.5.57 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 25 பேருக்கு நவீன காதொலிக் கருவிகள், 5 பேருக்கு சக்கர நாற்காலி, ஒருவருக்கு முடநீக்கு சாதனம் என மொத்தம் 41 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், எம்எல்ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எஸ். துரையப்பா, முத்துச்செல்வி, மேயர் இ. புவனேஸ்வரி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், அமர் சேவா சங்கச் செயலர் சங்கரராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment