FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, December 7, 2015

நெல்லை மாவட்டத்தில் 49,999 பேருக்கு தேசிய மாற்றுத் திறனாளி அட்டை: ஆட்சியர்

05.12.2015, திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 49,999 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா, வண்ணார்பேட்டையில் உள்ள எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் மாற்றுத் திறனாளிகள் செயல்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.500 வழங்கி வந்ததை தமிழக முதல்வர் ஜெயலிலதா ரூ. 1,000 ஆக உயர்த்தியுள்ளார். இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய்த் துறை மூலம் 16 ஆயிரம் பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை தவிர 49,999 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளில் 3 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறு. தனியார் துறைகளிலும் இத்தகைய ஒதுக்கீட்டை உறுதி செய்து வருகிறது. இந்த வாய்ப்புகளை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இந்த விழாவில், சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் 10 பேருக்கு ரூ.5.57 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 25 பேருக்கு நவீன காதொலிக் கருவிகள், 5 பேருக்கு சக்கர நாற்காலி, ஒருவருக்கு முடநீக்கு சாதனம் என மொத்தம் 41 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், எம்எல்ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எஸ். துரையப்பா, முத்துச்செல்வி, மேயர் இ. புவனேஸ்வரி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், அமர் சேவா சங்கச் செயலர் சங்கரராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment