FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, December 7, 2015

நெல்லை மாவட்டத்தில் 49,999 பேருக்கு தேசிய மாற்றுத் திறனாளி அட்டை: ஆட்சியர்

05.12.2015, திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 49,999 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா, வண்ணார்பேட்டையில் உள்ள எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் மாற்றுத் திறனாளிகள் செயல்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.500 வழங்கி வந்ததை தமிழக முதல்வர் ஜெயலிலதா ரூ. 1,000 ஆக உயர்த்தியுள்ளார். இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய்த் துறை மூலம் 16 ஆயிரம் பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை தவிர 49,999 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளில் 3 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறு. தனியார் துறைகளிலும் இத்தகைய ஒதுக்கீட்டை உறுதி செய்து வருகிறது. இந்த வாய்ப்புகளை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இந்த விழாவில், சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் 10 பேருக்கு ரூ.5.57 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 25 பேருக்கு நவீன காதொலிக் கருவிகள், 5 பேருக்கு சக்கர நாற்காலி, ஒருவருக்கு முடநீக்கு சாதனம் என மொத்தம் 41 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், எம்எல்ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எஸ். துரையப்பா, முத்துச்செல்வி, மேயர் இ. புவனேஸ்வரி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், அமர் சேவா சங்கச் செயலர் சங்கரராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment