FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, December 24, 2015

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை தந்த கணினி பயிற்சி: வெற்றிப் படிக்கட்டுகளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்

24.12.2015, அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கான தன்னம்பிக்கை மற்றும் திறனை கணினி பயிற்சியால் பெற்றுவருகின்றனர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்.

எப்போதும் இணையத்துடன் இணைந்திருக்கும் இந்த உலகில் கணினி இல்லையென்றால் எதுவும் சாத்தியம் இல்லை. சிபியு, மானிட்டர் போன்றவற்றின் பெயர்களை வார்த்தைகளாக மட்டும் காதால் கேட்டுப் பழகிய பார்வையற்றோர், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கணினியை எளிதாக கையாள்வது சாத்தியம் என்பது உறுதியாகியுள்ளது.

பிரெய்லி எழுத்துகளை கையால் உணர்ந்து படித்து வந்த பார்வை யற்றோர் இப்போது கணினியின் திரைகளில் தெரியும் எழுத்துகளை திரை வாசிப்பான் மென்பொருள் உதவியுடன் சொற்களாகக் கேட்டு உள்வாங்கிக் கொள்கின்றனர். இந்த வசதியால், படித்த பார்வையற்ற பலர் இன்றைக்கு இணையத்தைப் பயன்படுத்துவதும், சாட் செய்வதும், மெயில் அனுப்புவதும், புத்தகங்கள் வாசிப்பதும் சாதாரணமாகிவிட்டது.

இதை பலர் ஆக்கப்பூர்வமாக போட்டித் தேர்வுக்கு தேவையான பாடங்களை படிப்பதற்காகப் பயன் படுத்துகின்றனர். பெருநகரங்களில் பார்வையற்றோருக்கான இத் தகைய கணினி பயிற்சி எளிதாகக் கிடைத்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சிறுகுறு நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் படித்த பார்வையற்றோர் பயன்பெறும் நோக்கில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாற்றுத்திறனாளிகள் மையம் சார்பில், 3 ஆண்டுகளுக்கு முன்பே 5 நாள் மற்றும் 3 நாள் கணினி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பால் பயன்பெற்ற பலர் இன்று பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், தனியார் நிறுவனங்களிலும் பணியில் உள்ளனர்.

தற்போது மத்திய அரசு ஆணைப்படி வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பார்வையற்றோருக்கு ஒரு சதவீதம் ஒதுக்கியுள்ளனர். இதையடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தினர் ஒரு மாதகால கணினி பயிற்சி வகுப்புகளை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய 4 இடங்களில் நடத்தி முடித்ததுடன் தொடர்ந்து அடுத்த கட்டப் பயிற்சிக்கும் தயார்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பயிற்சி மையத்தின் துறைத் தலைவர் முனைவர் பிரபாவதி கூறியதாவது: பார்வையற்றோர் கணினியைப் பயன்படுத்துவதில் தன்னிறைவு பெறுவதன் மூலம் கற்றல் மற்றும் வேலைவாய்ப்பு பெற முடியும். இப்பயிற்சி மூலம் இவர்களுக்கு மொழிவளம், பகுத்தறியும் திறன், சொல்லியல் திறன் மற்றும் முக்கியமாக போட்டித் தேர்வுக்கான அனைத்து திறன்களும் கிடைக்கும்.

பயிற்சிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பார்வையற்றோரின் வசதிக்காக (என்விடிஏ) திரை வாசிப்பான் மென்பொருள், பயிற்சிக் கையேடு அடங்கிய ஒலிப் புத்தகம் வழங்குவதால் அவர்கள் தங்களுடைய கணினி, மடிக்கணினியில் இவற்றை இயக்கிக் கொள்ளலாம். இனி வரும் காலங்களில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் பார்வையற்றோருக்கு கணினி பயிற்சி மிக அவசியம். தங்குமிடம் உணவு உட்பட இலவசமாக கிடைக்கும். இதுபோன்ற பயிற்சியை பின்தங்கிய பகுதிகளில் உள்ள பார்வையற்றோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

“படிக்கும்போது சக மாணவிகள் கணினியைப் பற்றிக் கூறும்போது அதன் பயன்பாடு குறித்து வியந்துள்ளேன். ஆனால், இந்த பயிற்சி மூலம் அவர் கூறியதை என்னால் உணர முடிந்தது. திரை வாசிப்பான் மென்பொருள் உதவியுடன் தற்போது அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்களை நான் படிக்கிறேன். ஏனென்றால் எங்கள் உலகமும் போட்டி நிறைந்ததாகி விட்டது. போட்டியை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கணினி பயிற்சி எனக்குத் தந்துள்ளது” என்கிறார் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான முத்துலட்சுமி.

No comments:

Post a Comment