FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, December 29, 2015

வேலை வேண்டுமா? - இந்திய ரயில்வேயில் காலிப் பணியிடங்கள்

29.12.2015, நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் குரூப்-சி, குரூப்-பி நிலையிலான பணியிடங்கள் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் மூலமாக நிரப்பப்படுகின்றன. சென்னை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் உள்பட நாடு முழுவதும் இயங்கி வரும் 21 ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு போட்டித் தேர்வுகளை நடத்திவருகின்றன.

அந்த வகையில், தற்போது, தொழில்நுட்பம் அல்லாத பணிகள் என கருதப்படும் கமர்சியல் அப்ரண்டீஸ், டிராபிக் அப்ரண்டீஸ், உதவி ஸ்டேஷன் மாஸ்டர், கூட்ஸ் கார்டு, விசாரணை மற்றும் முன்பதிவு எழுத்தர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 18,252 காலியிடங்களை நிரப்புவதற்கு ஒட்டுமொத்தமாக அனைத்து ரயில்வே தேர்வு வாரியங்களும் ஒருங்கிணைந்த பணிநியமன அறிவிப்பை

வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சென்னை ரயில்வே பணியாளர் தேர்வாணையத்துக்கு விண்ணப்பித்தால் போதும். விருப்பமான எந்த வாரியத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றாலும் ஏதேனும் ஒரு தேர்வு வாரியத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டவாரியங்களுக்கு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பங்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருக்கவேண்டும். வயது 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் எனில் 5 ஆண்டுகளும்,ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் எனில் 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. ஆன்லைன் வழியிலான எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியுடையோர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.

கணினி மூலம் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும். இந்தத் தேர்வில் தவறான பதில்களுக்கு மைனஸ்மார்க் போடப்படும். அதாவது 3 கேள்விகளுக்கு தவறாக விடை அளித்தால், ஒரு மதிப்பெண்ணை இழக்க நேரிடும்.

உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு மட்டும் கூடுதலாக ஆப்டிடியூட் டெஸ்ட் இருக்கும். அதேபோல், தட்டச்சர் பதவி சம்பந்தப்பப்பட்ட பணிகளுக்கு தட்டச்சு செய்யும் திறன் பரிசோதிக்கப்படும்.தேர்வெழுத விரும்பும் பட்டதாரிகள் ஜனவரி மாதம் 25-ந் தேதிக்குள் ஆன்லைனில் (www.rrbchennai.gov.in ) விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment