FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, December 24, 2015

தெற்கு ரயில்வேயில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!!

சென்னை: தெற்கு ரயில்வேயில் கூட்ஸ் கார்ட், டைப்பிஸ்ட், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், திறமையும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்காக ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 976 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கமர்ஷியல் அப்ரண்டீஸ், டிராபிக் அப்ரண்டீஸ், கூட்ஸ் கார்ட், டைப்பிஸ்ட், உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு வயதுவரம்பு 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகள் உண்டு.

அனைத்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பு சலுகையில் தளர்வு வழங்கப்படும்.

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக பெறப்படும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

http;//www.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும்.

கூடுதல் விவரங்கள் அறிய http://rrbsecunderabad.nic.in/CEN_03_2015.pdf, என்ற லிங்க்கை தொடர்புகொள்ளலாம்.
CLICK HERE

No comments:

Post a Comment