FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, December 24, 2015

தெற்கு ரயில்வேயில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!!

சென்னை: தெற்கு ரயில்வேயில் கூட்ஸ் கார்ட், டைப்பிஸ்ட், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், திறமையும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்காக ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 976 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கமர்ஷியல் அப்ரண்டீஸ், டிராபிக் அப்ரண்டீஸ், கூட்ஸ் கார்ட், டைப்பிஸ்ட், உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு வயதுவரம்பு 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகள் உண்டு.

அனைத்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பு சலுகையில் தளர்வு வழங்கப்படும்.

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக பெறப்படும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

http;//www.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும்.

கூடுதல் விவரங்கள் அறிய http://rrbsecunderabad.nic.in/CEN_03_2015.pdf, என்ற லிங்க்கை தொடர்புகொள்ளலாம்.
CLICK HERE

No comments:

Post a Comment