FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, December 24, 2015

தெற்கு ரயில்வேயில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!!

சென்னை: தெற்கு ரயில்வேயில் கூட்ஸ் கார்ட், டைப்பிஸ்ட், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், திறமையும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்காக ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 976 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கமர்ஷியல் அப்ரண்டீஸ், டிராபிக் அப்ரண்டீஸ், கூட்ஸ் கார்ட், டைப்பிஸ்ட், உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு வயதுவரம்பு 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகள் உண்டு.

அனைத்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பு சலுகையில் தளர்வு வழங்கப்படும்.

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக பெறப்படும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

http;//www.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும்.

கூடுதல் விவரங்கள் அறிய http://rrbsecunderabad.nic.in/CEN_03_2015.pdf, என்ற லிங்க்கை தொடர்புகொள்ளலாம்.
CLICK HERE

No comments:

Post a Comment