FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, December 25, 2015

தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்,  25 December 2015
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்குத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:

மகளிர் நிலம் வாங்கும் திட்டம் (பெண்களுக்கு), நிலம் மேம்பாட்டுத் திட்டம் (இரு பாலருக்கும்), தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், தொழில் முனைவோர் திட்டங்கள், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவமனை, மருந்துக் கடை, கண் கண்ணாடியகம், முட நீக்க மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல் போன்ற தொழில்கள் தொடங்க தாட்கோவில் விண்ணப்பிக்கலாம்.

மகளிர் சுய உதவிக் குழு, கலப்புக் குழு, ஆண்கள் சுய உதவிக் குழு, திருநங்கைகள் சுய உதவிக் குழு, மாற்றுத் திறனாளி சுய உதவிக் குழு ஆகியவற்றுக்கான சுழல் நிதி, பொருளாதாரக் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆட்சியர் தன் விருப்புரிமை நிதி மற்றும் மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி திட்டத்தில் ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 40 வயதுக்கும் அதிகமான திருமணம் ஆகாத பெண்கள், பெற்றோர் - பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், திருநங்கைகள், நலிந்த கலைஞர்கள் ஆகியோருக்குக் கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்திய குடிமைப்பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி 1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்புகிறவர்கள் இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலமும் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த ஆதிதிராவிட மக்கள் இத்திட்டங்கள் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

No comments:

Post a Comment