FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, December 25, 2015

தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்,  25 December 2015
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்குத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:

மகளிர் நிலம் வாங்கும் திட்டம் (பெண்களுக்கு), நிலம் மேம்பாட்டுத் திட்டம் (இரு பாலருக்கும்), தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், தொழில் முனைவோர் திட்டங்கள், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவமனை, மருந்துக் கடை, கண் கண்ணாடியகம், முட நீக்க மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல் போன்ற தொழில்கள் தொடங்க தாட்கோவில் விண்ணப்பிக்கலாம்.

மகளிர் சுய உதவிக் குழு, கலப்புக் குழு, ஆண்கள் சுய உதவிக் குழு, திருநங்கைகள் சுய உதவிக் குழு, மாற்றுத் திறனாளி சுய உதவிக் குழு ஆகியவற்றுக்கான சுழல் நிதி, பொருளாதாரக் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆட்சியர் தன் விருப்புரிமை நிதி மற்றும் மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி திட்டத்தில் ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 40 வயதுக்கும் அதிகமான திருமணம் ஆகாத பெண்கள், பெற்றோர் - பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், திருநங்கைகள், நலிந்த கலைஞர்கள் ஆகியோருக்குக் கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்திய குடிமைப்பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி 1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்புகிறவர்கள் இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலமும் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த ஆதிதிராவிட மக்கள் இத்திட்டங்கள் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

No comments:

Post a Comment