FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, December 12, 2015

ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்ல வளாகத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியை சீரமைக்கும் பணி தீவிரம்

சென்னை, டிச. 10–
சென்னை ராமாவரத்தில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லமும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நினைவு இல்ல வளாகத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்து வந்த மாணவ–மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நினைவு இல்லத்தில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் நனைந்து முற்றிலும் சேதம் அடைந்தன. எம்.ஜி.ஆர். கைப்பட எழுதிய 10 டைரிகள், பயன்படுத்திய கிராமபோன் மற்றும் விருதுகள், கேடயங்கள் உள்ளிட்ட பொருட்களும் சேதமாகி இருந்தது.

இந்த பொருட்கள் அனைத்தும் நினைவு இல்லத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும் சேதம் அடைந்து இருந்தது. இந்த புகைப்படங்களை மீண்டும் சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு 20 அடி உயரத்தில் வெள்ளம் சூழ்ந்து இருந்தது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சீரமைப்பு பணி குறித்து எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறும் போது, ‘‘நினைவு இல்லத்தையொட்டி நடைபெறும் சாலை விரிவாக்கப்பணியை விரைவாக முடித்து அங்கு பெரிய சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். வருகிற ஜனவரி 17–ந்தேதி எம்.ஜி.ஆரின் 100–வது பிறந்தநாள் ஆகும். இந்த நேரத்தில் இப்படி நடந்து இருப்பது வேதனை அளிக்கிறது.

குறிப்பாக காதுகேளாதோர் பள்ளியில் இருந்த குழந்தைகளை நானும், எனது நண்பர் ஒருவரும் தண்ணீரில் நீந்தி சென்று காப்பாற்றி மொட்டைமாடிக்கு அழைத்து சென்றோம்.

பின்னர் அவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து சென்றனர். இதற்காக அவர்களது காலில் விழுந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

No comments:

Post a Comment