FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, December 12, 2015

ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்ல வளாகத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியை சீரமைக்கும் பணி தீவிரம்

சென்னை, டிச. 10–
சென்னை ராமாவரத்தில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லமும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நினைவு இல்ல வளாகத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்து வந்த மாணவ–மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நினைவு இல்லத்தில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் நனைந்து முற்றிலும் சேதம் அடைந்தன. எம்.ஜி.ஆர். கைப்பட எழுதிய 10 டைரிகள், பயன்படுத்திய கிராமபோன் மற்றும் விருதுகள், கேடயங்கள் உள்ளிட்ட பொருட்களும் சேதமாகி இருந்தது.

இந்த பொருட்கள் அனைத்தும் நினைவு இல்லத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும் சேதம் அடைந்து இருந்தது. இந்த புகைப்படங்களை மீண்டும் சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு 20 அடி உயரத்தில் வெள்ளம் சூழ்ந்து இருந்தது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சீரமைப்பு பணி குறித்து எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறும் போது, ‘‘நினைவு இல்லத்தையொட்டி நடைபெறும் சாலை விரிவாக்கப்பணியை விரைவாக முடித்து அங்கு பெரிய சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். வருகிற ஜனவரி 17–ந்தேதி எம்.ஜி.ஆரின் 100–வது பிறந்தநாள் ஆகும். இந்த நேரத்தில் இப்படி நடந்து இருப்பது வேதனை அளிக்கிறது.

குறிப்பாக காதுகேளாதோர் பள்ளியில் இருந்த குழந்தைகளை நானும், எனது நண்பர் ஒருவரும் தண்ணீரில் நீந்தி சென்று காப்பாற்றி மொட்டைமாடிக்கு அழைத்து சென்றோம்.

பின்னர் அவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து சென்றனர். இதற்காக அவர்களது காலில் விழுந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

No comments:

Post a Comment