FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, December 12, 2015

ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்ல வளாகத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியை சீரமைக்கும் பணி தீவிரம்

சென்னை, டிச. 10–
சென்னை ராமாவரத்தில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லமும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நினைவு இல்ல வளாகத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்து வந்த மாணவ–மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நினைவு இல்லத்தில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் நனைந்து முற்றிலும் சேதம் அடைந்தன. எம்.ஜி.ஆர். கைப்பட எழுதிய 10 டைரிகள், பயன்படுத்திய கிராமபோன் மற்றும் விருதுகள், கேடயங்கள் உள்ளிட்ட பொருட்களும் சேதமாகி இருந்தது.

இந்த பொருட்கள் அனைத்தும் நினைவு இல்லத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும் சேதம் அடைந்து இருந்தது. இந்த புகைப்படங்களை மீண்டும் சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு 20 அடி உயரத்தில் வெள்ளம் சூழ்ந்து இருந்தது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சீரமைப்பு பணி குறித்து எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறும் போது, ‘‘நினைவு இல்லத்தையொட்டி நடைபெறும் சாலை விரிவாக்கப்பணியை விரைவாக முடித்து அங்கு பெரிய சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். வருகிற ஜனவரி 17–ந்தேதி எம்.ஜி.ஆரின் 100–வது பிறந்தநாள் ஆகும். இந்த நேரத்தில் இப்படி நடந்து இருப்பது வேதனை அளிக்கிறது.

குறிப்பாக காதுகேளாதோர் பள்ளியில் இருந்த குழந்தைகளை நானும், எனது நண்பர் ஒருவரும் தண்ணீரில் நீந்தி சென்று காப்பாற்றி மொட்டைமாடிக்கு அழைத்து சென்றோம்.

பின்னர் அவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து சென்றனர். இதற்காக அவர்களது காலில் விழுந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

No comments:

Post a Comment