FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, December 29, 2015

காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்கள் தெளிவான மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கலாம்

காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்கள் தெளிவான மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பேசமுடியாது
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட பல சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் 2006–ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை டாக்டர்கள் குழு முன்பு ஆஜர்படுத்தி மருத்துவ சோதனைக்கு உள்ளாகும்படி கோவை கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவரது உடல் நிலையை டாக்டர்கள் சோதித்தனர். பின்னர், அவரால் பேசவோ, எழுதவோ, பிறர் உதவியில்லாமல் செயல்படவோ முடியாது என்று டாக்டர்கள் அறிக்கை கொடுத்தனர்.

ரத்து செய்யவேண்டும்
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் சண்முகசுந்தரம் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் நல்ல மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீதான குற்ற வழக்கை விசாரித்து, தண்டனை வழங்கலாம் என்று குற்றவியல் விசாரணை முறை சட்டம் 318 கூறுகிறது. இந்த சட்டப்பிரிவு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அறிவித்து, அந்த பிரிவை ரத்து செய்யவேண்டும் என்று கூறி இருந்தார்.

தண்டிக்கலாம்
இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில், ‘நல்ல மனநிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குற்றச்செயலில் ஈடுபட்டால், சராசரி மனிதர் குற்றம் செய்தால், எவ்வாறு வழக்குகள் விசாரிக்கப்படுமோ, அதேபோல வழக்கை விசாரித்து குற்றச்சாட்டு நிரூபணமாகும்பட்சத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். எனவே குற்றவியல் விசாரணை முறை சட்டம் 318, அரசியல் சட்டத்துக்கு எதிரானது கிடையாது’ என்று கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment