FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, December 29, 2015

காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்கள் தெளிவான மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கலாம்

காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்கள் தெளிவான மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பேசமுடியாது
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட பல சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் 2006–ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை டாக்டர்கள் குழு முன்பு ஆஜர்படுத்தி மருத்துவ சோதனைக்கு உள்ளாகும்படி கோவை கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவரது உடல் நிலையை டாக்டர்கள் சோதித்தனர். பின்னர், அவரால் பேசவோ, எழுதவோ, பிறர் உதவியில்லாமல் செயல்படவோ முடியாது என்று டாக்டர்கள் அறிக்கை கொடுத்தனர்.

ரத்து செய்யவேண்டும்
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் சண்முகசுந்தரம் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் நல்ல மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீதான குற்ற வழக்கை விசாரித்து, தண்டனை வழங்கலாம் என்று குற்றவியல் விசாரணை முறை சட்டம் 318 கூறுகிறது. இந்த சட்டப்பிரிவு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அறிவித்து, அந்த பிரிவை ரத்து செய்யவேண்டும் என்று கூறி இருந்தார்.

தண்டிக்கலாம்
இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில், ‘நல்ல மனநிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குற்றச்செயலில் ஈடுபட்டால், சராசரி மனிதர் குற்றம் செய்தால், எவ்வாறு வழக்குகள் விசாரிக்கப்படுமோ, அதேபோல வழக்கை விசாரித்து குற்றச்சாட்டு நிரூபணமாகும்பட்சத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். எனவே குற்றவியல் விசாரணை முறை சட்டம் 318, அரசியல் சட்டத்துக்கு எதிரானது கிடையாது’ என்று கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment