FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, December 29, 2015

காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்கள் தெளிவான மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கலாம்

காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்கள் தெளிவான மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பேசமுடியாது
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட பல சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் 2006–ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை டாக்டர்கள் குழு முன்பு ஆஜர்படுத்தி மருத்துவ சோதனைக்கு உள்ளாகும்படி கோவை கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவரது உடல் நிலையை டாக்டர்கள் சோதித்தனர். பின்னர், அவரால் பேசவோ, எழுதவோ, பிறர் உதவியில்லாமல் செயல்படவோ முடியாது என்று டாக்டர்கள் அறிக்கை கொடுத்தனர்.

ரத்து செய்யவேண்டும்
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் சண்முகசுந்தரம் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் நல்ல மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீதான குற்ற வழக்கை விசாரித்து, தண்டனை வழங்கலாம் என்று குற்றவியல் விசாரணை முறை சட்டம் 318 கூறுகிறது. இந்த சட்டப்பிரிவு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அறிவித்து, அந்த பிரிவை ரத்து செய்யவேண்டும் என்று கூறி இருந்தார்.

தண்டிக்கலாம்
இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில், ‘நல்ல மனநிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குற்றச்செயலில் ஈடுபட்டால், சராசரி மனிதர் குற்றம் செய்தால், எவ்வாறு வழக்குகள் விசாரிக்கப்படுமோ, அதேபோல வழக்கை விசாரித்து குற்றச்சாட்டு நிரூபணமாகும்பட்சத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். எனவே குற்றவியல் விசாரணை முறை சட்டம் 318, அரசியல் சட்டத்துக்கு எதிரானது கிடையாது’ என்று கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment