FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, December 29, 2015

காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்கள் தெளிவான மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கலாம்

காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்கள் தெளிவான மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பேசமுடியாது
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட பல சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் 2006–ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை டாக்டர்கள் குழு முன்பு ஆஜர்படுத்தி மருத்துவ சோதனைக்கு உள்ளாகும்படி கோவை கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவரது உடல் நிலையை டாக்டர்கள் சோதித்தனர். பின்னர், அவரால் பேசவோ, எழுதவோ, பிறர் உதவியில்லாமல் செயல்படவோ முடியாது என்று டாக்டர்கள் அறிக்கை கொடுத்தனர்.

ரத்து செய்யவேண்டும்
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் சண்முகசுந்தரம் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் நல்ல மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீதான குற்ற வழக்கை விசாரித்து, தண்டனை வழங்கலாம் என்று குற்றவியல் விசாரணை முறை சட்டம் 318 கூறுகிறது. இந்த சட்டப்பிரிவு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அறிவித்து, அந்த பிரிவை ரத்து செய்யவேண்டும் என்று கூறி இருந்தார்.

தண்டிக்கலாம்
இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில், ‘நல்ல மனநிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குற்றச்செயலில் ஈடுபட்டால், சராசரி மனிதர் குற்றம் செய்தால், எவ்வாறு வழக்குகள் விசாரிக்கப்படுமோ, அதேபோல வழக்கை விசாரித்து குற்றச்சாட்டு நிரூபணமாகும்பட்சத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். எனவே குற்றவியல் விசாரணை முறை சட்டம் 318, அரசியல் சட்டத்துக்கு எதிரானது கிடையாது’ என்று கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment