FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, December 29, 2015

பயணப்படி பெற புதிய அரசாணை: மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

29.12.2015, சேலம்:
 'பயணப்படி பெறுவதில், நீடிக்கும் குழப்பத்தை நீக்க, புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்' என மாற்றுத்திறனாளிகள், அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், அரசு ஊழியராக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஊர்தி படியாக, மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அந்தந்த மாவட்டத்தில், சம்பந்தப்பட்ட துறையின் சார்பு அதிகாரி ஒப்புதல் ஏற்று, ஊர்திபடி வழங்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள், தொடர்ந்து, முறையிட்டனர். இந்த கோரிக்கையை ஏற்று, மாவட்டத்தில், சம்பந்தப்பட்ட துறையின் சார்பு அலுவலர், ஊர்திபடி வழங்க அதிகாரம் வழங்கி கடந்த 22ம் தேதி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், ஊர்திபடிக்கு சான்றாக, தேசிய அடையாள அட்டை பயன்படுத்துவது குறித்து, உத்தரவில் குறிப்பிடாதது, பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக, மாற்றுத்திறனாளிகள், கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலர் நம்புராஜன் கூறியதாவது: மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரால், ஊனத்தின் சதவீதம், தன்மை ஆகியவற்றை குறிப்பிட்டு, கையெழுத்திட்டு வழங்கப்படும், தேசிய அடையாள அட்டையை, ஊர்திபடி பெற சான்றாக ஏற்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி மாநில ஆணையம், கருத்துரு அனுப்பியும், அதுபற்றி, அரசு உத்தரவில், குறிப்பிடாதது குழப்பமாக உள்ளது. எனவே, ஊர்திபடிக்காக, தனியாக சான்றுபெறும் நிலை உள்ளது. செவித்திறன் இழந்து, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திபடி வழங்குவது தொடர்ந்து, மறுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஊர்திபடி கிடைக்க, புதிய அரசாணை வெளியிட்டு, தமிழக அரசு உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment