FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, December 29, 2015

பயணப்படி பெற புதிய அரசாணை: மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

29.12.2015, சேலம்:
 'பயணப்படி பெறுவதில், நீடிக்கும் குழப்பத்தை நீக்க, புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்' என மாற்றுத்திறனாளிகள், அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், அரசு ஊழியராக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஊர்தி படியாக, மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அந்தந்த மாவட்டத்தில், சம்பந்தப்பட்ட துறையின் சார்பு அதிகாரி ஒப்புதல் ஏற்று, ஊர்திபடி வழங்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள், தொடர்ந்து, முறையிட்டனர். இந்த கோரிக்கையை ஏற்று, மாவட்டத்தில், சம்பந்தப்பட்ட துறையின் சார்பு அலுவலர், ஊர்திபடி வழங்க அதிகாரம் வழங்கி கடந்த 22ம் தேதி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், ஊர்திபடிக்கு சான்றாக, தேசிய அடையாள அட்டை பயன்படுத்துவது குறித்து, உத்தரவில் குறிப்பிடாதது, பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக, மாற்றுத்திறனாளிகள், கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலர் நம்புராஜன் கூறியதாவது: மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரால், ஊனத்தின் சதவீதம், தன்மை ஆகியவற்றை குறிப்பிட்டு, கையெழுத்திட்டு வழங்கப்படும், தேசிய அடையாள அட்டையை, ஊர்திபடி பெற சான்றாக ஏற்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி மாநில ஆணையம், கருத்துரு அனுப்பியும், அதுபற்றி, அரசு உத்தரவில், குறிப்பிடாதது குழப்பமாக உள்ளது. எனவே, ஊர்திபடிக்காக, தனியாக சான்றுபெறும் நிலை உள்ளது. செவித்திறன் இழந்து, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திபடி வழங்குவது தொடர்ந்து, மறுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஊர்திபடி கிடைக்க, புதிய அரசாணை வெளியிட்டு, தமிழக அரசு உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment