FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, December 29, 2015

பயணப்படி பெற புதிய அரசாணை: மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

29.12.2015, சேலம்:
 'பயணப்படி பெறுவதில், நீடிக்கும் குழப்பத்தை நீக்க, புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்' என மாற்றுத்திறனாளிகள், அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், அரசு ஊழியராக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஊர்தி படியாக, மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அந்தந்த மாவட்டத்தில், சம்பந்தப்பட்ட துறையின் சார்பு அதிகாரி ஒப்புதல் ஏற்று, ஊர்திபடி வழங்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள், தொடர்ந்து, முறையிட்டனர். இந்த கோரிக்கையை ஏற்று, மாவட்டத்தில், சம்பந்தப்பட்ட துறையின் சார்பு அலுவலர், ஊர்திபடி வழங்க அதிகாரம் வழங்கி கடந்த 22ம் தேதி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், ஊர்திபடிக்கு சான்றாக, தேசிய அடையாள அட்டை பயன்படுத்துவது குறித்து, உத்தரவில் குறிப்பிடாதது, பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக, மாற்றுத்திறனாளிகள், கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலர் நம்புராஜன் கூறியதாவது: மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரால், ஊனத்தின் சதவீதம், தன்மை ஆகியவற்றை குறிப்பிட்டு, கையெழுத்திட்டு வழங்கப்படும், தேசிய அடையாள அட்டையை, ஊர்திபடி பெற சான்றாக ஏற்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி மாநில ஆணையம், கருத்துரு அனுப்பியும், அதுபற்றி, அரசு உத்தரவில், குறிப்பிடாதது குழப்பமாக உள்ளது. எனவே, ஊர்திபடிக்காக, தனியாக சான்றுபெறும் நிலை உள்ளது. செவித்திறன் இழந்து, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திபடி வழங்குவது தொடர்ந்து, மறுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஊர்திபடி கிடைக்க, புதிய அரசாணை வெளியிட்டு, தமிழக அரசு உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment