FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, December 18, 2015

கல்வி உதவித்தொகை பெற 4 ஆயிரம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பம் அதிகாரிகள் தகவல்

17.12.2015, கோவை,
கோவை மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற 4 ஆயிரம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக அரசு சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு குச்சிகள், காதொலி கருவிகள், 3 சக்கர வாகனங்கள், தையல் எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப் பட்டும், அவர்களுக்கு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன் பள்ளியில் படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை கல்வி உதவித்தொகையும் வழங்கப் பட்டு வருகிறது. அந்த கல்வி உதவித்தொகையை பெற ஏராளமான விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவ லகத்துக்கு வந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கல்வி உதவித்தொகை

தமிழக அரசு சார்பில் பள்ளியில் படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1000-ம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4 ஆயிரம், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகையை பெற அக்டோபர், நவம்பர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற் காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை மற்றும் அதற்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டது.

4 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அதன்படி கல்வி உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் 4 ஆயிரம் பேர் விண் ணப்பம் கொடுத்து உள்ளனர். தற்போது அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் அந்த பணி முடிக்கப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். அடுத்த மாதம் (ஜனவரி) இறுதிக்குள் அந்தந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment