FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, December 18, 2015

கல்வி உதவித்தொகை பெற 4 ஆயிரம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பம் அதிகாரிகள் தகவல்

17.12.2015, கோவை,
கோவை மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற 4 ஆயிரம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக அரசு சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு குச்சிகள், காதொலி கருவிகள், 3 சக்கர வாகனங்கள், தையல் எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப் பட்டும், அவர்களுக்கு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன் பள்ளியில் படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை கல்வி உதவித்தொகையும் வழங்கப் பட்டு வருகிறது. அந்த கல்வி உதவித்தொகையை பெற ஏராளமான விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவ லகத்துக்கு வந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கல்வி உதவித்தொகை

தமிழக அரசு சார்பில் பள்ளியில் படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1000-ம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4 ஆயிரம், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகையை பெற அக்டோபர், நவம்பர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற் காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை மற்றும் அதற்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டது.

4 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அதன்படி கல்வி உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் 4 ஆயிரம் பேர் விண் ணப்பம் கொடுத்து உள்ளனர். தற்போது அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் அந்த பணி முடிக்கப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். அடுத்த மாதம் (ஜனவரி) இறுதிக்குள் அந்தந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment