FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, December 25, 2015

மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி ஆர்வமில்லாத மாற்றுத்திறனாளிகள்

24.12.2015, கோவை:
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் சேர, இரு ஆண்டாக விண்ணப்பம் வராததால், திட்டத்தை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு, மருத்துவ கல்லுாரி ஆய்வு கூடங்களில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு, தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட, 12 மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் மட்டுமே, சேர முடியும்.இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தில், மாதம், 300 ரூபாய் உதவித்தொகை அளிப்பதோடு, அண்டை மாவட்டங்களில் இருந்து வரும், மாணவர்கள் தங்கி படிக்க விடுதி வசதிகளையும், நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படும். இதற்கு, பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து, தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இத்திட்டத்தில் படிக்க, இரண்டு ஆண்டுகளாக எந்த மாற்றுத்திறனாளி மாணவர்களும் விண்ணப்பிக்கவில்லை.

மாற்றுத்தினாளிகள் நலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் சேர, மாற்றுத்திறனாளிகள் மத்தியில் போதிய ஆர்வமில்லை. மூன்று ஆண்டாக, தமிழகம் முழுவதும் இருந்து, 66 பேர் மட்டுமே, பயிற்சி பெறுகின்றனர். இதேநிலை நீடிக்கும் பட்சத்தில், திட்டத்தை நிறுத்தவும் வாய்ப்புள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment