FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, December 25, 2015

மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி ஆர்வமில்லாத மாற்றுத்திறனாளிகள்

24.12.2015, கோவை:
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் சேர, இரு ஆண்டாக விண்ணப்பம் வராததால், திட்டத்தை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு, மருத்துவ கல்லுாரி ஆய்வு கூடங்களில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு, தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட, 12 மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் மட்டுமே, சேர முடியும்.இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தில், மாதம், 300 ரூபாய் உதவித்தொகை அளிப்பதோடு, அண்டை மாவட்டங்களில் இருந்து வரும், மாணவர்கள் தங்கி படிக்க விடுதி வசதிகளையும், நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படும். இதற்கு, பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து, தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இத்திட்டத்தில் படிக்க, இரண்டு ஆண்டுகளாக எந்த மாற்றுத்திறனாளி மாணவர்களும் விண்ணப்பிக்கவில்லை.

மாற்றுத்தினாளிகள் நலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் சேர, மாற்றுத்திறனாளிகள் மத்தியில் போதிய ஆர்வமில்லை. மூன்று ஆண்டாக, தமிழகம் முழுவதும் இருந்து, 66 பேர் மட்டுமே, பயிற்சி பெறுகின்றனர். இதேநிலை நீடிக்கும் பட்சத்தில், திட்டத்தை நிறுத்தவும் வாய்ப்புள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment