FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, December 25, 2015

மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி ஆர்வமில்லாத மாற்றுத்திறனாளிகள்

24.12.2015, கோவை:
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் சேர, இரு ஆண்டாக விண்ணப்பம் வராததால், திட்டத்தை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு, மருத்துவ கல்லுாரி ஆய்வு கூடங்களில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு, தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட, 12 மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் மட்டுமே, சேர முடியும்.இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தில், மாதம், 300 ரூபாய் உதவித்தொகை அளிப்பதோடு, அண்டை மாவட்டங்களில் இருந்து வரும், மாணவர்கள் தங்கி படிக்க விடுதி வசதிகளையும், நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படும். இதற்கு, பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து, தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இத்திட்டத்தில் படிக்க, இரண்டு ஆண்டுகளாக எந்த மாற்றுத்திறனாளி மாணவர்களும் விண்ணப்பிக்கவில்லை.

மாற்றுத்தினாளிகள் நலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் சேர, மாற்றுத்திறனாளிகள் மத்தியில் போதிய ஆர்வமில்லை. மூன்று ஆண்டாக, தமிழகம் முழுவதும் இருந்து, 66 பேர் மட்டுமே, பயிற்சி பெறுகின்றனர். இதேநிலை நீடிக்கும் பட்சத்தில், திட்டத்தை நிறுத்தவும் வாய்ப்புள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment