FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, December 25, 2015

மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி ஆர்வமில்லாத மாற்றுத்திறனாளிகள்

24.12.2015, கோவை:
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் சேர, இரு ஆண்டாக விண்ணப்பம் வராததால், திட்டத்தை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு, மருத்துவ கல்லுாரி ஆய்வு கூடங்களில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு, தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட, 12 மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் மட்டுமே, சேர முடியும்.இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தில், மாதம், 300 ரூபாய் உதவித்தொகை அளிப்பதோடு, அண்டை மாவட்டங்களில் இருந்து வரும், மாணவர்கள் தங்கி படிக்க விடுதி வசதிகளையும், நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படும். இதற்கு, பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து, தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இத்திட்டத்தில் படிக்க, இரண்டு ஆண்டுகளாக எந்த மாற்றுத்திறனாளி மாணவர்களும் விண்ணப்பிக்கவில்லை.

மாற்றுத்தினாளிகள் நலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் சேர, மாற்றுத்திறனாளிகள் மத்தியில் போதிய ஆர்வமில்லை. மூன்று ஆண்டாக, தமிழகம் முழுவதும் இருந்து, 66 பேர் மட்டுமே, பயிற்சி பெறுகின்றனர். இதேநிலை நீடிக்கும் பட்சத்தில், திட்டத்தை நிறுத்தவும் வாய்ப்புள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment