FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, December 25, 2015

காதுகேளாதோர், பார்வையற்றோர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்: சிறப்பு கல்வியியலில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பணி வழங்கக்கோரி வழக்கு

25.12.2015,மதுரை,
காதுகேளாதோர், பார்வையற்றோர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளும்போது சிறப்பு கல்வியியலில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டில் மனு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் பி.வடிவேல்முருகன். தமிழ்நாடு சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்க மாநிலத்தலைவரான இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வியியல் பட்டப்படிப்பை(ஸ்பெஷல் பி.எட்.) முடித்தவர்கள் தான் பாடம் கற்றுத் தர முடியும். தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் பேர் சிறப்பு கல்வியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். சிறப்பு பள்ளிகள் மட்டுமின்றி அரசுப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களின் கல்விக்காக ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு 30.1.2015 அன்று அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்த அரசாணையை 2015–2016ம் கல்வி ஆண்டில் அமல்படுத்த உத்தரவிட வேணடும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆசிரியர் பணி
இந்தநிலையில், தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பார்வையற்றோர் பள்ளி மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் 26.11.2015 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க என்னென்ன கல்வித்தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்பதில் சிறப்பு கல்வியியல் பட்டம் பற்றி குறிப்பிடப்பட வில்லை. சிறப்புக்கல்வியியலில் பட்டப்படிப்பை(ஸ்பெஷல் பி.எட்.) முடித்தவர்கள் மட்டுமே மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க முடியும் என்ற நிலையில் பார்வையற்றோர் பள்ளி மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் சிறப்புக்கல்வியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ரத்து செய்ய வேண்டும்

இதனால் பார்வைற்றோர், காதுகேளாதோர் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டத்தை சேர்க்க வேண்டும் என்றும், இப்பணியிடத்தில் சிறப்பு கல்வியியல் பட்டம் மற்றும் சிறப்பு கல்வியியல் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு மனு கொடுத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். பார்வைற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டத்தை சேர்க்கவும், பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

பரிசீலிக்க வேண்டும்

இந்த மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் என்.முனிராஜ் ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி, பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனங்களை மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணை மற்றும் இந்திய மறுவாழ்வு குழுமத்தின் உத்தரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மனுதாரர் 1.12.2015 அன்று அனுப்பிய மனுவை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பரிசீலித்து 6 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment