FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, December 25, 2015

காதுகேளாதோர், பார்வையற்றோர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்: சிறப்பு கல்வியியலில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பணி வழங்கக்கோரி வழக்கு

25.12.2015,மதுரை,
காதுகேளாதோர், பார்வையற்றோர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளும்போது சிறப்பு கல்வியியலில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டில் மனு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் பி.வடிவேல்முருகன். தமிழ்நாடு சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்க மாநிலத்தலைவரான இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வியியல் பட்டப்படிப்பை(ஸ்பெஷல் பி.எட்.) முடித்தவர்கள் தான் பாடம் கற்றுத் தர முடியும். தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் பேர் சிறப்பு கல்வியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். சிறப்பு பள்ளிகள் மட்டுமின்றி அரசுப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களின் கல்விக்காக ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு 30.1.2015 அன்று அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்த அரசாணையை 2015–2016ம் கல்வி ஆண்டில் அமல்படுத்த உத்தரவிட வேணடும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆசிரியர் பணி
இந்தநிலையில், தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பார்வையற்றோர் பள்ளி மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் 26.11.2015 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க என்னென்ன கல்வித்தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்பதில் சிறப்பு கல்வியியல் பட்டம் பற்றி குறிப்பிடப்பட வில்லை. சிறப்புக்கல்வியியலில் பட்டப்படிப்பை(ஸ்பெஷல் பி.எட்.) முடித்தவர்கள் மட்டுமே மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க முடியும் என்ற நிலையில் பார்வையற்றோர் பள்ளி மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் சிறப்புக்கல்வியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ரத்து செய்ய வேண்டும்

இதனால் பார்வைற்றோர், காதுகேளாதோர் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டத்தை சேர்க்க வேண்டும் என்றும், இப்பணியிடத்தில் சிறப்பு கல்வியியல் பட்டம் மற்றும் சிறப்பு கல்வியியல் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு மனு கொடுத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். பார்வைற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டத்தை சேர்க்கவும், பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

பரிசீலிக்க வேண்டும்

இந்த மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் என்.முனிராஜ் ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி, பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனங்களை மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணை மற்றும் இந்திய மறுவாழ்வு குழுமத்தின் உத்தரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மனுதாரர் 1.12.2015 அன்று அனுப்பிய மனுவை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பரிசீலித்து 6 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment