FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, December 25, 2015

காதுகேளாதோர், பார்வையற்றோர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்: சிறப்பு கல்வியியலில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பணி வழங்கக்கோரி வழக்கு

25.12.2015,மதுரை,
காதுகேளாதோர், பார்வையற்றோர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளும்போது சிறப்பு கல்வியியலில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டில் மனு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் பி.வடிவேல்முருகன். தமிழ்நாடு சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்க மாநிலத்தலைவரான இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வியியல் பட்டப்படிப்பை(ஸ்பெஷல் பி.எட்.) முடித்தவர்கள் தான் பாடம் கற்றுத் தர முடியும். தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் பேர் சிறப்பு கல்வியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். சிறப்பு பள்ளிகள் மட்டுமின்றி அரசுப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களின் கல்விக்காக ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு 30.1.2015 அன்று அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்த அரசாணையை 2015–2016ம் கல்வி ஆண்டில் அமல்படுத்த உத்தரவிட வேணடும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆசிரியர் பணி
இந்தநிலையில், தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பார்வையற்றோர் பள்ளி மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் 26.11.2015 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க என்னென்ன கல்வித்தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்பதில் சிறப்பு கல்வியியல் பட்டம் பற்றி குறிப்பிடப்பட வில்லை. சிறப்புக்கல்வியியலில் பட்டப்படிப்பை(ஸ்பெஷல் பி.எட்.) முடித்தவர்கள் மட்டுமே மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க முடியும் என்ற நிலையில் பார்வையற்றோர் பள்ளி மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் சிறப்புக்கல்வியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ரத்து செய்ய வேண்டும்

இதனால் பார்வைற்றோர், காதுகேளாதோர் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டத்தை சேர்க்க வேண்டும் என்றும், இப்பணியிடத்தில் சிறப்பு கல்வியியல் பட்டம் மற்றும் சிறப்பு கல்வியியல் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு மனு கொடுத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். பார்வைற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டத்தை சேர்க்கவும், பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

பரிசீலிக்க வேண்டும்

இந்த மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் என்.முனிராஜ் ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி, பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனங்களை மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணை மற்றும் இந்திய மறுவாழ்வு குழுமத்தின் உத்தரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மனுதாரர் 1.12.2015 அன்று அனுப்பிய மனுவை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பரிசீலித்து 6 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment