FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, December 25, 2015

காதுகேளாதோர், பார்வையற்றோர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்: சிறப்பு கல்வியியலில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பணி வழங்கக்கோரி வழக்கு

25.12.2015,மதுரை,
காதுகேளாதோர், பார்வையற்றோர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளும்போது சிறப்பு கல்வியியலில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டில் மனு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் பி.வடிவேல்முருகன். தமிழ்நாடு சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்க மாநிலத்தலைவரான இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வியியல் பட்டப்படிப்பை(ஸ்பெஷல் பி.எட்.) முடித்தவர்கள் தான் பாடம் கற்றுத் தர முடியும். தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் பேர் சிறப்பு கல்வியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். சிறப்பு பள்ளிகள் மட்டுமின்றி அரசுப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களின் கல்விக்காக ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு 30.1.2015 அன்று அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்த அரசாணையை 2015–2016ம் கல்வி ஆண்டில் அமல்படுத்த உத்தரவிட வேணடும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆசிரியர் பணி
இந்தநிலையில், தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பார்வையற்றோர் பள்ளி மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் 26.11.2015 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க என்னென்ன கல்வித்தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்பதில் சிறப்பு கல்வியியல் பட்டம் பற்றி குறிப்பிடப்பட வில்லை. சிறப்புக்கல்வியியலில் பட்டப்படிப்பை(ஸ்பெஷல் பி.எட்.) முடித்தவர்கள் மட்டுமே மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க முடியும் என்ற நிலையில் பார்வையற்றோர் பள்ளி மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் சிறப்புக்கல்வியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ரத்து செய்ய வேண்டும்

இதனால் பார்வைற்றோர், காதுகேளாதோர் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டத்தை சேர்க்க வேண்டும் என்றும், இப்பணியிடத்தில் சிறப்பு கல்வியியல் பட்டம் மற்றும் சிறப்பு கல்வியியல் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு மனு கொடுத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். பார்வைற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டத்தை சேர்க்கவும், பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

பரிசீலிக்க வேண்டும்

இந்த மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் என்.முனிராஜ் ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி, பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனங்களை மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணை மற்றும் இந்திய மறுவாழ்வு குழுமத்தின் உத்தரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மனுதாரர் 1.12.2015 அன்று அனுப்பிய மனுவை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பரிசீலித்து 6 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment