FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, December 12, 2015

பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை: அறிவிப்பு பலகையில் விவரங்கள் ஒட்ட உத்தரவு

10.12.2015, சேலம்: ''மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, பொதுத்தேர்வில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவரங்களை, அனைத்து பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் ஒட்ட வேண்டும்,'' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கண் பார்வையற்றோர், காதுகேளாத, வாய்பேச இயலாதோர், விபத்துகளில் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ளிட்டோருக்கு, மொழிப்பாடங்கள் ஒன்றிலிருந்து விலக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம், எழுத உதவியாளர் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளாததாலும், அவற்றை மாணவர்களிடம் சேர்க்காததாலும், மாணவ, மாணவியர் பலர் பாதிக்கும் நிலை உள்ளது. அதை தவிர்க்க, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, அரசு தேர்வுத்துறையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து, இதுவரை வந்த நான்கு அரசாணைகளின் நகல்கள், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக படித்து, தகுதியான மாணவர்களுக்கு தேவையான சலுகைகளை பெற்றுத்தர, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பள்ளியின் அறிவிப்பு பலகைகளில் ஒட்டி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment