FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, December 12, 2015

பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை: அறிவிப்பு பலகையில் விவரங்கள் ஒட்ட உத்தரவு

10.12.2015, சேலம்: ''மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, பொதுத்தேர்வில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவரங்களை, அனைத்து பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் ஒட்ட வேண்டும்,'' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கண் பார்வையற்றோர், காதுகேளாத, வாய்பேச இயலாதோர், விபத்துகளில் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ளிட்டோருக்கு, மொழிப்பாடங்கள் ஒன்றிலிருந்து விலக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம், எழுத உதவியாளர் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளாததாலும், அவற்றை மாணவர்களிடம் சேர்க்காததாலும், மாணவ, மாணவியர் பலர் பாதிக்கும் நிலை உள்ளது. அதை தவிர்க்க, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, அரசு தேர்வுத்துறையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து, இதுவரை வந்த நான்கு அரசாணைகளின் நகல்கள், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக படித்து, தகுதியான மாணவர்களுக்கு தேவையான சலுகைகளை பெற்றுத்தர, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பள்ளியின் அறிவிப்பு பலகைகளில் ஒட்டி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment