FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, December 12, 2015

பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை: அறிவிப்பு பலகையில் விவரங்கள் ஒட்ட உத்தரவு

10.12.2015, சேலம்: ''மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, பொதுத்தேர்வில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவரங்களை, அனைத்து பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் ஒட்ட வேண்டும்,'' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கண் பார்வையற்றோர், காதுகேளாத, வாய்பேச இயலாதோர், விபத்துகளில் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ளிட்டோருக்கு, மொழிப்பாடங்கள் ஒன்றிலிருந்து விலக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம், எழுத உதவியாளர் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளாததாலும், அவற்றை மாணவர்களிடம் சேர்க்காததாலும், மாணவ, மாணவியர் பலர் பாதிக்கும் நிலை உள்ளது. அதை தவிர்க்க, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, அரசு தேர்வுத்துறையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து, இதுவரை வந்த நான்கு அரசாணைகளின் நகல்கள், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக படித்து, தகுதியான மாணவர்களுக்கு தேவையான சலுகைகளை பெற்றுத்தர, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பள்ளியின் அறிவிப்பு பலகைகளில் ஒட்டி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment