FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, December 4, 2015

காதலியை சுட்டுக் கொன்ற வழக்கு: பிஸ்டோரியஸுக்கு 15 ஆண்டு சிறை?

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓட்டப் பந்தய வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தனது காதலியை திட்டமிட்டு சுட்டுக் கொன்றதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

29 வயதான பிஸ்டோரியஸ், கடந்த 2013-ல் தனது காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்றார். இதையடுத்து கைது

செய்யப்பட்ட பிஸ்டோரியஸ், எனது வீட்டுக்குள் திருடர்கள் நுழைகிறார்கள் என நினைத்து சுட்டுவிட்டேன் என விசாரணையின்போது தெரிவித்தார்.

இதன்பிறகு அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அதில் ஓர் ஆண்டை கழித்துவிட்ட பிஸ்டோரியஸ், இப்போது உடல் நலக்குறைவு காரணமாக வீட்டுக் காவலில் உள்ளார். இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிஸ்டோரியஸ் திட்டமிட்டே கொலை செய்துள்ளார் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்க சட்ட விதிகளின்படி திட்டமிட்டு கிரிமினல் நோக்கத்தோடு செய்யப்படும் கொலைகளுக்கு குறைந்தபட்சமாக 15 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படுவது வழக்கம். அதனால் பிஸ்டோரியஸ் 15 ஆண்டு சிறைத் தண்டனை பெற வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment