FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, December 4, 2015

காதலியை சுட்டுக் கொன்ற வழக்கு: பிஸ்டோரியஸுக்கு 15 ஆண்டு சிறை?

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓட்டப் பந்தய வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தனது காதலியை திட்டமிட்டு சுட்டுக் கொன்றதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

29 வயதான பிஸ்டோரியஸ், கடந்த 2013-ல் தனது காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்றார். இதையடுத்து கைது

செய்யப்பட்ட பிஸ்டோரியஸ், எனது வீட்டுக்குள் திருடர்கள் நுழைகிறார்கள் என நினைத்து சுட்டுவிட்டேன் என விசாரணையின்போது தெரிவித்தார்.

இதன்பிறகு அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அதில் ஓர் ஆண்டை கழித்துவிட்ட பிஸ்டோரியஸ், இப்போது உடல் நலக்குறைவு காரணமாக வீட்டுக் காவலில் உள்ளார். இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிஸ்டோரியஸ் திட்டமிட்டே கொலை செய்துள்ளார் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்க சட்ட விதிகளின்படி திட்டமிட்டு கிரிமினல் நோக்கத்தோடு செய்யப்படும் கொலைகளுக்கு குறைந்தபட்சமாக 15 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படுவது வழக்கம். அதனால் பிஸ்டோரியஸ் 15 ஆண்டு சிறைத் தண்டனை பெற வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment