FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, December 4, 2015

காதலியை சுட்டுக் கொன்ற வழக்கு: பிஸ்டோரியஸுக்கு 15 ஆண்டு சிறை?

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓட்டப் பந்தய வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தனது காதலியை திட்டமிட்டு சுட்டுக் கொன்றதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

29 வயதான பிஸ்டோரியஸ், கடந்த 2013-ல் தனது காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்றார். இதையடுத்து கைது

செய்யப்பட்ட பிஸ்டோரியஸ், எனது வீட்டுக்குள் திருடர்கள் நுழைகிறார்கள் என நினைத்து சுட்டுவிட்டேன் என விசாரணையின்போது தெரிவித்தார்.

இதன்பிறகு அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அதில் ஓர் ஆண்டை கழித்துவிட்ட பிஸ்டோரியஸ், இப்போது உடல் நலக்குறைவு காரணமாக வீட்டுக் காவலில் உள்ளார். இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிஸ்டோரியஸ் திட்டமிட்டே கொலை செய்துள்ளார் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்க சட்ட விதிகளின்படி திட்டமிட்டு கிரிமினல் நோக்கத்தோடு செய்யப்படும் கொலைகளுக்கு குறைந்தபட்சமாக 15 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படுவது வழக்கம். அதனால் பிஸ்டோரியஸ் 15 ஆண்டு சிறைத் தண்டனை பெற வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment