FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, December 21, 2015

எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரி வேலை 700 பணியிடங்கள்

எல்.ஐ.சி. யில் ‘அசிஸ்டண்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீஸர்’ பணிக்கு 700 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:–

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ‘லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா’ சுருக்கமாக எல்.ஐ.சி. என்றழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ‘அசிஸ்டண்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீஸர்’ பணியிடங்களுக்கு மொத்தம் 700 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் எஸ்.சி. பிரிவினருக்கு 106 பணியிடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 53 பணியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 192 பணியிடங்களும், பொது பிரிவினருக்கு 349 இடங்களும் உள்ளன. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான 21 இடங்களும் அடக்கம்.

விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் கீழே...

வயதுத்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 1–12–2015–ந் தேதியில் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 2–12–1985 மற்றும் 1–12–1994 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை அல்லது முதுகலையில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் இணைய வழி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.

கட்டணம்:

கட்டணமாக எஸ்.சி./ எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூபாய் 100–ம், இதர பிரிவினர் 600–ம் செலுத்த வேண்டும். கட்டணத்தை இன்டர்நெட் பேங்கிங், கிரடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை வழியாக மட்டுமே செலுத்த முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 5–1–2016–ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

கூடுதல் விவரங்களை அறியவும், விண்ணப்பிக்கவும் www.licindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

1 comment: