FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, July 1, 2016

மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.1 லட்சம் கடன் வழங்க வேண்டும் கடலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

30.06.2016, கடலூர்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க சிறப்பு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் டிசம்பர் 3 இயக்க மாநில தலைவர் தீபக், மும்பை நிர்வாக தலைவர் ருக்குமணி சிப்ளா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சுய தொழில் தொடங்க விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் நிர்வாகிகள் வெங்கடேசன், சித்ரா, ரேவதி, ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14–ந்தேதி 5–ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நடத்துவது, தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்ய, அவர்களை நேரில் சந்திப்பது, மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment