FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, July 1, 2016

மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.1 லட்சம் கடன் வழங்க வேண்டும் கடலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

30.06.2016, கடலூர்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க சிறப்பு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் டிசம்பர் 3 இயக்க மாநில தலைவர் தீபக், மும்பை நிர்வாக தலைவர் ருக்குமணி சிப்ளா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சுய தொழில் தொடங்க விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் நிர்வாகிகள் வெங்கடேசன், சித்ரா, ரேவதி, ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14–ந்தேதி 5–ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நடத்துவது, தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்ய, அவர்களை நேரில் சந்திப்பது, மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment