FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, July 1, 2016

மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.1 லட்சம் கடன் வழங்க வேண்டும் கடலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

30.06.2016, கடலூர்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க சிறப்பு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் டிசம்பர் 3 இயக்க மாநில தலைவர் தீபக், மும்பை நிர்வாக தலைவர் ருக்குமணி சிப்ளா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சுய தொழில் தொடங்க விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் நிர்வாகிகள் வெங்கடேசன், சித்ரா, ரேவதி, ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14–ந்தேதி 5–ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நடத்துவது, தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்ய, அவர்களை நேரில் சந்திப்பது, மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment