FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, July 1, 2016

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

30.06.2016, சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.கோவிந்தராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை மாவட்டத்தில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாத, பிளஸ் 2, பட்டப்படிப்பு உள்ளிட்ட கல்வித்தகுதிகளை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் வேலை வாய்ப்பு இல்லாதவர்கள், பதிவை தொடர்ந்து புதுப்பிப்பதுடன், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் தனியார் பணியில் இல்லாதவராகவும் இருப்பவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வழங்கப்படம் அரசின் உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் நந்தனத்தில் உள்ள தொழில் திறனற்றோர் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெறலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர்ப்பதிவேட்டில் உள்ளவர்கள், கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெறலாம்.

ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு நிறைவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை பதிவு எண், உதவித்தொகை எண்ணுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment