FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, July 12, 2016

கல்விக் கடன் மறுப்பு: DEAF மாற்றுத் திறனாளியை படிக்க வைக்கத் தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்

மதுரை, 12.07.2016
ஐந்து ஆண்டுகள் கல்வி கடன் வழங்கிய நிலையில், இறுதி ஆண்டுக்கு வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டதால் மாற்றுத் திறனாளி மகனைப் படிக்க வைக்க வழியின்றி தவிக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.

பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலமுருகன். இவருக்கு 3 குழந்தைகள். மூவருமே வாய் பேச முடியாத, காது கேளாத குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள். இவர்களில் மூத்த மகள் பிஏ முடித்துள்ளார். இரண்டாவது மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து வருகிறார். மூன்றாவது மகள் பிளஸ் 2 படிக்கிறார். பிடெக் படிக்கும் ராகேஷுக்கு, பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக் கடன் பெற்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கு தலா ரூ.65 ஆயிரம் வழங்கியுள்ளனர். இறுதி ஆண்டுக்கு வங்கிக்கு விண்ணப்பம் அளித்த நிலையில், கடன் தொகையை வழங்க மறுத்துவிட்டனராம். இந்நிலையில், உதவி கோரி மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் திங்கள்கிழமை நடந்த குறைதீர் கூட்டத்தில் பாலமுருகன் மனு அளித்தார்.

அவர் கூறியது: வாடகை ஆட்டோவில் ஓட்டுநராக வேலை செய்கிறேன். இதில் கிடைக்கும் சம்பளத்தில் தான் 3 குழந்தைகளையும் படிக்க வைக்கிறேன். இரண்டாவது மகன் ராகேஷுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.95,200 கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் ரூ.65 ஆயிரம் வங்கிக் கடன் கிடைக்கும் நிலையில், எஞ்சிய தொகையை மிகவும் சிரமப்பட்டு செலுத்தி வந்தேன். இறுதி ஆண்டில் வங்கிக் கடனையும் நிறுத்திவிட்டனர். கல்விக் கட்டணத்தை எப்படிச் செலுத்துவது எனத் தெரியவில்லை.

ஐந்து ஆண்டுகள் முடித்துவிட்ட நிலையில், கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் படிப்பு பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. வங்கிக் கடன் கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment