FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, July 12, 2016

கல்விக் கடன் மறுப்பு: DEAF மாற்றுத் திறனாளியை படிக்க வைக்கத் தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்

மதுரை, 12.07.2016
ஐந்து ஆண்டுகள் கல்வி கடன் வழங்கிய நிலையில், இறுதி ஆண்டுக்கு வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டதால் மாற்றுத் திறனாளி மகனைப் படிக்க வைக்க வழியின்றி தவிக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.

பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலமுருகன். இவருக்கு 3 குழந்தைகள். மூவருமே வாய் பேச முடியாத, காது கேளாத குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள். இவர்களில் மூத்த மகள் பிஏ முடித்துள்ளார். இரண்டாவது மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து வருகிறார். மூன்றாவது மகள் பிளஸ் 2 படிக்கிறார். பிடெக் படிக்கும் ராகேஷுக்கு, பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக் கடன் பெற்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கு தலா ரூ.65 ஆயிரம் வழங்கியுள்ளனர். இறுதி ஆண்டுக்கு வங்கிக்கு விண்ணப்பம் அளித்த நிலையில், கடன் தொகையை வழங்க மறுத்துவிட்டனராம். இந்நிலையில், உதவி கோரி மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் திங்கள்கிழமை நடந்த குறைதீர் கூட்டத்தில் பாலமுருகன் மனு அளித்தார்.

அவர் கூறியது: வாடகை ஆட்டோவில் ஓட்டுநராக வேலை செய்கிறேன். இதில் கிடைக்கும் சம்பளத்தில் தான் 3 குழந்தைகளையும் படிக்க வைக்கிறேன். இரண்டாவது மகன் ராகேஷுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.95,200 கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் ரூ.65 ஆயிரம் வங்கிக் கடன் கிடைக்கும் நிலையில், எஞ்சிய தொகையை மிகவும் சிரமப்பட்டு செலுத்தி வந்தேன். இறுதி ஆண்டில் வங்கிக் கடனையும் நிறுத்திவிட்டனர். கல்விக் கட்டணத்தை எப்படிச் செலுத்துவது எனத் தெரியவில்லை.

ஐந்து ஆண்டுகள் முடித்துவிட்ட நிலையில், கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் படிப்பு பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. வங்கிக் கடன் கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment