FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, July 2, 2016

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பணியாற்றியவர்கள்: 12-க்குள் விருது பெற விண்ணப்பிக்கலாம்



02.07.2016, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப் பாக சேவை புரிந்தவர்களுக்கு சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு வரும் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றுபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று முதல்வரால் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பணியாற்றிய மாவட்ட ஆட்சியர், சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், அதிகம் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த சமூக பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

விருதுடன் 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த மாவட்ட ஆட்சியருக்கு ரூ.25 ஆயிரம், தொண்டு நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். மாவட்ட ஆட்சியருக்கான விருது, ஆட்சியர்கள் மாநாட்டில் வழங்கப்படும்.

இந்த விருதுகளைப் பெற, ‘மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை- 78’ அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று, உரிய சான்றுகளுடன். மாற்றுத்திறனாளிகள் மாநில நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று, மாநில ஆணையருக்கு ஜூலை 12-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment