FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, July 2, 2016

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பணியாற்றியவர்கள்: 12-க்குள் விருது பெற விண்ணப்பிக்கலாம்



02.07.2016, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப் பாக சேவை புரிந்தவர்களுக்கு சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு வரும் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றுபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று முதல்வரால் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பணியாற்றிய மாவட்ட ஆட்சியர், சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், அதிகம் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த சமூக பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

விருதுடன் 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த மாவட்ட ஆட்சியருக்கு ரூ.25 ஆயிரம், தொண்டு நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். மாவட்ட ஆட்சியருக்கான விருது, ஆட்சியர்கள் மாநாட்டில் வழங்கப்படும்.

இந்த விருதுகளைப் பெற, ‘மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை- 78’ அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று, உரிய சான்றுகளுடன். மாற்றுத்திறனாளிகள் மாநில நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று, மாநில ஆணையருக்கு ஜூலை 12-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment