FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, July 2, 2016

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பணியாற்றியவர்கள்: 12-க்குள் விருது பெற விண்ணப்பிக்கலாம்



02.07.2016, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப் பாக சேவை புரிந்தவர்களுக்கு சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு வரும் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றுபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று முதல்வரால் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பணியாற்றிய மாவட்ட ஆட்சியர், சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், அதிகம் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த சமூக பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

விருதுடன் 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த மாவட்ட ஆட்சியருக்கு ரூ.25 ஆயிரம், தொண்டு நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். மாவட்ட ஆட்சியருக்கான விருது, ஆட்சியர்கள் மாநாட்டில் வழங்கப்படும்.

இந்த விருதுகளைப் பெற, ‘மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை- 78’ அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று, உரிய சான்றுகளுடன். மாற்றுத்திறனாளிகள் மாநில நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று, மாநில ஆணையருக்கு ஜூலை 12-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment