FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, July 22, 2016

தையல் இயந்திரம் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு

20.07.2016, கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந்தத் தேர்வை மாவட்ட ஆட்சியர் (பொ) கோ.விஜயா தொடங்கி வைத்து கூறியதாவது:
மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நடப்பு நிதியாண்டில் மோட்டார் பொருத்திய 125 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த தையல் இயந்திரங்களைப் பெறுவதற்கான தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், அரசு மருத்துவர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளின் தொழில் திறன், தையல் பயிற்சி மற்றும் ஊனத்தின் அளவையும் பரிசோதித்து தகுதியான நபர்களை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மூலமாக விரைவில் தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். மாவட்டத்தில் இதுவரை மோட்டார் பொருத்திய 325 தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில், அரசு மருத்துவர்கள் ஏ.என்.பரிமேலழகன், இள.தமிழரசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, அரசினர் பயிற்சி மைய முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் ஆர்.ரேணுகாதேவி, இளநிலை தொழில்நுட்ப அலுவலர் கே.உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment