FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, July 22, 2016

தையல் இயந்திரம் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு

20.07.2016, கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந்தத் தேர்வை மாவட்ட ஆட்சியர் (பொ) கோ.விஜயா தொடங்கி வைத்து கூறியதாவது:
மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நடப்பு நிதியாண்டில் மோட்டார் பொருத்திய 125 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த தையல் இயந்திரங்களைப் பெறுவதற்கான தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், அரசு மருத்துவர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளின் தொழில் திறன், தையல் பயிற்சி மற்றும் ஊனத்தின் அளவையும் பரிசோதித்து தகுதியான நபர்களை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மூலமாக விரைவில் தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். மாவட்டத்தில் இதுவரை மோட்டார் பொருத்திய 325 தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில், அரசு மருத்துவர்கள் ஏ.என்.பரிமேலழகன், இள.தமிழரசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, அரசினர் பயிற்சி மைய முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் ஆர்.ரேணுகாதேவி, இளநிலை தொழில்நுட்ப அலுவலர் கே.உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment