FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, July 22, 2016

தையல் இயந்திரம் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு

20.07.2016, கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந்தத் தேர்வை மாவட்ட ஆட்சியர் (பொ) கோ.விஜயா தொடங்கி வைத்து கூறியதாவது:
மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நடப்பு நிதியாண்டில் மோட்டார் பொருத்திய 125 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த தையல் இயந்திரங்களைப் பெறுவதற்கான தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், அரசு மருத்துவர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளின் தொழில் திறன், தையல் பயிற்சி மற்றும் ஊனத்தின் அளவையும் பரிசோதித்து தகுதியான நபர்களை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மூலமாக விரைவில் தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். மாவட்டத்தில் இதுவரை மோட்டார் பொருத்திய 325 தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில், அரசு மருத்துவர்கள் ஏ.என்.பரிமேலழகன், இள.தமிழரசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, அரசினர் பயிற்சி மைய முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் ஆர்.ரேணுகாதேவி, இளநிலை தொழில்நுட்ப அலுவலர் கே.உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment