FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, July 22, 2016

தையல் இயந்திரம் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு

20.07.2016, கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந்தத் தேர்வை மாவட்ட ஆட்சியர் (பொ) கோ.விஜயா தொடங்கி வைத்து கூறியதாவது:
மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நடப்பு நிதியாண்டில் மோட்டார் பொருத்திய 125 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த தையல் இயந்திரங்களைப் பெறுவதற்கான தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், அரசு மருத்துவர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளின் தொழில் திறன், தையல் பயிற்சி மற்றும் ஊனத்தின் அளவையும் பரிசோதித்து தகுதியான நபர்களை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மூலமாக விரைவில் தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். மாவட்டத்தில் இதுவரை மோட்டார் பொருத்திய 325 தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில், அரசு மருத்துவர்கள் ஏ.என்.பரிமேலழகன், இள.தமிழரசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, அரசினர் பயிற்சி மைய முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் ஆர்.ரேணுகாதேவி, இளநிலை தொழில்நுட்ப அலுவலர் கே.உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment